Sunday, April 25, 2021

மானுடம் என்பது நமக்கு மட்டும் தக்காளி ஜூஸ் அல்ல

 
மானுடம் என்பது நமக்கு மட்டும் தக்காளி ஜூஸ் அல்ல.


இப்ப அமெரிக்காவுல கிட்டதட்ட 30 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்இது இந்தவருடம் ஜனவரி பிப்ரவரியில் துவங்கி மூன்று மாதம் ஆகியும் முழுமையடையவில்லைஇன்னும் தடுப்பூசி போடவேண்டிய பணி அதிகமிருக்குதொடர்கிறது வெல்லும்.


இதற்கிடையில் இங்கும் கடந்த நவம்பரில் ஒரு மிகப்பெரிய தேர்தல் நாடு தழுவிய அளவில் மிக அதிகஎண்ணிக்கை வாக்காளரோடு நடந்து முடிந்துள்ளதுஅந்த நேரத்தில் தடுப்பூசியே வரவில்லை.


இப்போது தடுப்பூசி வந்த பிறகும்இங்கு ஒரு கும்பல் தான் தடுப்பூசியே போட மாட்டேன்னு ஒரு பக்கம்இன்னொரு பக்கம் மாடர்னாஃபைசர் இரண்டும் கிடைச்சப்பநான் ஃபைசர் தான் போடுவேன்அதுல சைடுஎபஃக்ட் கம்மி(யாம்), மாடர்னா போட மாட்டேன்னு திரிஞ்ச கும்பல் உண்டுபிறகு ஜான்சன் அண்ட் ஜான்சன்வந்தப்பஅது ஒரு ஊசி அது தான் போடுவேன்னு அலப்பரித்த கும்பல் ஒன்னு உண்டு.


இதனால் அரசுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் ஒவ்வொரு நாளும் நஷ்டமாச்சுன்னு தெரியுமாவெளிய சொல்லமாட்டாங்கஇதைப்பத்தி பேச மாட்டாங்கநானெல்லாம் நாள் கடைசியில வீணாப் போறதை ஓடிப்போய்பந்திக்கு முந்தி மாடர்னா ஊசி போட்டுகிட்டேன்.


கடந்த பிப்ரவரி முழுவதும் தேடி கிட்டு இருந்தோம்என்னயா இவ்வளவு சாவுன்னு சொல்லறாங்கஆனால் ஒருநாளுக்கு 200–300 பேருக்குப் போட்டுகிட்டிருக்காங்கன்னு நினைப்பேன்வெளிய சொல்லிக்க முடியாதுஅதற்கப்புறம் mass vaccination sites ஆரம்பிச்சு கடகடன்னு போட ஆரம்பிச்சுதல இந்த அளவுக்கு அமெரிக்காதேறி வந்து வரும் ஜூன் ஜூலையில எல்லாத்தையும் திறந்து விடலாமான்னு யோசிக்கிற அளவுக்கு வந்துருக்கு.


இந்த இடைப்பட்ட காலங்களில்எவ்வளவு சாவுஎவ்வளவு வென்டிலேட்டர்ஸ் தட்டுப்பாடுமாத்திரைகள் மற்றும்ஹாஸ்பிடல் பெட் infrastructure க்கு எப்படி பணியாற்றியது இந்த அரசு கடந்த ஆறேழு மாதங்களில்அமெரிக்காவை அப்ப எள்ளி நகையாடினவங்களையெல்லாம் மனதிலேற்றிக் கொண்டு மீண்டு வருகிறதுஇங்கும் எவ்வளவு பிணங்கள்பிணவறை இல்லாமல் கண்டெயினரில் வைத்திருந்த அவலம்திறந்த வெளிகளில்கூடாரம் அமைத்து செயல்பட்டதும் உண்டு.


இப்போது இந்தியாவில் ஏற்படும் உயிர்சேதம் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல்அமெரிக்காவைப் பார்த்துஎள்ளிநகையாடிய நேரத்திலாவது தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கலாம்பரவலாக தடுப்பூசிகளைகட்டாயமாக்கியிருக்கலாம்


ஒலி எழுப்பி விளக்கேற்றி கொரோனாவை விரட்ட அறைகூவல் விட்டப்ப வந்து பங்கேற்ற அந்த கோடானுகோடிப்பேருக்காவது முதலில் தடுப்பூசி போடுவதற்கும் அழைப்பு விடுத்துச் செய்திருந்தால் ஓரளவுக்குசாதித்திருக்கலாம்ரயில் பெட்டிகள் வார்டுகளானது என்னவாயிற்றோஅவை பயன்பட்டிருக்கும்அட்மினிஸ்ட்ரேட்டிவ் failure இப்ப.


அமெரிக்கா தன் துன்பங்களைத் துடைத்தெறிந்து மீண்டு வந்த மாதிரி ஒரு தேசிய அளவு மாஸ் கேம்பைன்தடுப்பூசிக்கும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உபகரணங்கள எளிதாக எல்லா உள்ளூர் கிராமங்கங்கள்டவுன்ஷிப்நகரங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்நோயாளிகளை கூண்டாக ஏர்லிஃப்ட் செய்து வசதியுள்ளஇடங்களுக்கு அனுப்பி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்கல்யாண மண்டபங்கள்ஸ்டேடியங்கள்ஆஸ்பத்திரிகளாக மாறனும்.


இந்நோயை எதிர்கொள்ள மக்கள் பங்களிப்புஒத்துழைப்பு மிக அவசியம்சாவு அருகில் நெருங்கும் வரையாரும் உணர்வதில்லை.


அமெரிக்க ஜனநாயகம் முன்னுதாரனமாக நிற்கிறதுநிற்கும்உதவும் கூட.


சிறந்த போர்க்கால ஏற்பாடுகள் செய்து

உயிர்சேதம் தவிர்த்தால் தான்

வாழ்வினிது

ओलै सिरिय !

No comments: