Friday, April 23, 2021

புத்தக தினம்

 இன்று உலக புத்தக தினமாம். வாழ்த்துகள் அனைவருக்கும்.

எனக்குத் தெரிந்து நான் இதுவரைப் பார்த்த பெரும்பாலான மக்கள், தன் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த புத்தகங்களைத் தவிர, தான் படித்த பிற புத்தகங்களை வைத்து அதை ஆதாரமாகக்காட்டி பிறரை வசை பாடுவதற்கு மட்டுமே தங்களது படிப்பறிவை வாசிப்பறிவை உபயோகப்படுத்துகின்றனர்.

இது நான் பள்ளி மாணவனாக இருந்த போதிலிருந்தே பார்த்து வருகிறேன். நிறைய புத்தகங்கள் படிப்பதால் வாசிப்பதால் இவர்களுக்கு நல்ல மொழிவளம், உரையாடும் திறன், ஒரு திறந்த மனப்பான்மை, பதவி உயர்வு, இன்னும் பலவற்றிலும் மிகச்சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் கொஞ்சம் பக்கத்தில் போனால் தெரியவருவது இவர்கள் இத்தகைய தங்கள் மூலதனத்தை உபயோகப்படுத்துவது பிறரை வசை பாட, அதற்கு ஏதுவாக தனது பல புத்தகப்படிப்பை உதாரணம் காட்டுவது, இது மட்டுமே தொடர்ந்து செய்து வருவது.

1978களில் பள்ளி மாணவனாக இருந்த காலம் தொட்டு இதைப்பார்த்து வருகிறேன். (அதுக்கு முன்ன என்ன பண்ணின்னனு கேட்டா, விவரம் தெரியாத பச்ச புள்ள அப்ப).

இதுவே தன் கல்வி சார்ந்த படிப்பு, தொழில் சார்ந்த படிப்பு, தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தன் துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பதால் தன் தனிப்பட்ட வாழ்வில் முன்னேறுவது மட்டுமல்ல, இதில் தன் குடும்பத்திற்கும் வருமானம் ஈட்டித்தரக்கூடிய ஒரு நல்ல மனிதராக, நாட்டில் தொழில்வளம், கல்வி வளம், ஆராய்ச்சிகளில் வெற்றியடைபவராக நாட்டையும் முன்னேற்றுபவராக வழிநடத்துகின்றனர்.

ஆகவே ஆகவே ஆகவே!

இப்ப இன்னாங்குற அதுக்கு!

உமக்குத் தேவையான பாதையில் நீ செல்ல
நன்கு எல்லாவற்றையும் படித்து முன்னேற உதவும் புத்தகங்களால்

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: