Thursday, April 22, 2021

ஆந்திரா நெல்லிக்காய் ஊறுகாய்

 அம்மா முழு நெல்லிக்காய் ஊறுகாய் போட்டாங்கன்னா அதுக்காகவே அன்னிக்கு மோர் சாதம் நிறைய சாப்பிடுவேன். ஒரு பெரிய ஜாடி நிறைய போடுவாங்க. அவ்வளவு சுவையாயிருக்கும். அம்மா போட்ட நெல்லிக்காயைச் சாப்பிட்டு ஏழெட்டு வருஷம் மேலே ஆயிடுச்சு. அதே மாதிரி வடுமாங்காய் மாஹாளிக்கிழங்கும்.

இரண்டு வாரம் முன்ன தான் நினைச்சேன். இனி அம்மா இல்லை. இனி எங்க போய் முழு பெரிய சைஸ் நெல்லிக்காய் சாப்பிடறதுன்னு. ஏக்கத்தோடு பெருமூச்சு தான்.

அம்மிணிக்கு ஆந்திரா ஊறுகாய் தான் ரொம்பப்பிடிக்கும். போன வாரம் சொன்னாப்புல, இங்க ஒரு தெலுகு பொண்ணு அவங்க ஊர்லேர்ந்து fresh homemade ஊறுகாய் ஆந்திராவுலேர்ந்து வரவழைக்கப் போறாங்க! எனக்கு சிந்தக்காய் சொல்லப்போறேன் உனக்குப் பிடிச்ச நெல்லிக்காய் சொல்லப் போறேன்னாங்க! அது என்னமோ சிந்தக்காய் ஏதோ ஒரு தனிரகம்ன்னு கம்முனு இருந்தேன். என்னன்னு மறந்து போச்சு.

இன்னிக்கு ஊறுகாயை அந்த தெலுகு பெண் வீட்டுல பிக்கப் பண்ணப் போனப்ப அம்மிணி தன்னோட சிந்தக்காயைப் பத்தி ரொம்ப அலட்டினாப்புல. எனக்கு நெல்லிக்காயும் சொன்னது ஞாபகமில்லை. 

திரும்பி வரும் போது சிந்தக்காய்ன்னா என்னன்னு ஞாபகம் வந்துருச்சு! இந்த புளியங்காயைப் பெருசா சிந்தக்காய்ன்னு அலட்டற, உன்னால என் கிட்ட அது புளியங்காய்ன்னு சொன்னா இன்னா குறைஞ்சு போயிருவேன்னா, சொல்ல முடியாதுன்னுட்டாப்புல.

வூடு நுழைஞ்ச அடுத்த நிமிஷம், நீ தான் கீழ சிந்தாம கொட்டுவே இப்ப கொட்டுன்னு இரண்டு காலி பாட்டிலை எடுத்து வச்சாப்புல.

நாலு தடவை இதை கொல்டில என்ன எழுதியிருக்குப் படி படின்னு சொல்லி அம்மிணியோட புளியங்காயை (சிந்தக்காய்ன்னு சொல்ல முடியாது போய்க்க) ஒரு பாட்டில்ல கொட்டிபுட்டு, அம்மா போடற மாதிரி நெல்லிக்காயை ஒரு பீங்கான் ஜாடியிலக் கொட்டி வைச்சேன்.

அம்மிணி முதல்ல இரண்டையும் வெறும் சோத்துலப் பிசைஞ்சு ஒரு அலறல், உங்க நெல்லிக்காய் சூப்பரோ சூப்பர்ன்னாப்புல.

தட்டுல தயிர்சோத்தைப் போட்டு ஒரு முழுநெல்லிக்காயைப் போட்டா, வாவ், அமிர்தம். அப்புடியே ஊர்ல பண்ற வீட்டு நெல்லிக்காய் ஊறுகாய். அம்மா போடற முழு சைஸ்ல பாதி தானிருக்கு, சிறுநெல்லி அரைநெல்லிக்காயில்லை இது. முழு நெல்லிக்காய் தான். ஆனால் வளரலை.

ஆனால் அல்டிமேட் வீட்டுச்சுவை. அம்மிணி பாதி லவட்டிப்பேங்கறாப்புல. முன்னாடி இது உனக்கு மட்டும்ன்னாப்புல, இப்ப தானே காலி பண்ணிருவாப்புல.

வீணை கிளாஸ் முடிஞ்சு வந்தும் ஊறுகாய் கணக்கே பேசறாப்புல. இப்ப அவங்க அம்மாகிட்டயும் அதே பெருமை ஓடிகிட்டிருக்கு. 

ஒட்டு கேட்டதில், இவர் எப்பப்பார்த்தாலும் அந்தக்கடை பழைய ஊறுகாயைத் திங்கிறார். இந்த தடவையாவது புதுசா சாப்பிடட்டும்கிறாப்புல

நமக்கு கொஞ்சம் விட்டு வைப்பாப்புல போலிருக்கு.

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: