Thursday, April 22, 2021

நாலு வரி பேசினாலும் நசுங்காம

இங்க ஒரு பஞ்சாபி ரெஸ்டாரண்ட்க்கு கடந்த 18 வருடமாகப் போய் சாப்பிடுகிறேன். அந்த உணவு ரொம்பப் பிடிக்கும். பையனோட முதல் பர்த்டேக்கு அங்கிருந்து வரவழைச்சு தான் ஒரு பெரிய பார்ட்டி கூட வச்சேன்.

போன வருடம் கோவிட் ஆரம்பச்சதிலிருந்து அங்கு போகவில்லை. சில மாதங்கள் மூடப்பட்டது. இப்போது திறந்துட்டாங்க!

இன்னிக்குப் போய் ஒரு கட்டுசோறு கட்டிகிட்டு வந்தேன். அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் மற்றும் சர்தார்ஜி குக் இருவரும் என்னைப் பார்த்தாலே டேபுளுக்கு வந்து ஹிந்தியில சரளமாகப் பேச ஆரம்பிச்சுருவாங்க! லன்ச் அல்லது டின்னர் கடை மூடற நேரம் போனா, மீதியாவரதைப் pack பண்ணி சும்மா காசு வாங்காம கொடுத்துருவாங்க. அது இரண்டு நாளுக்கு நமக்கு நிக்கும். அவங்க அதை அடுத்த நாள் உபயோகிப்பதில்லை.

அஸ்ஸாம் மேற்கு வங்கம், மும்பை விட்டு வந்த பிறகு ஹிந்தி பேசற வாய்ப்பு விட்டுப் போச்சு. ஹிந்தி படங்கள் பார்ப்பதும் ஒன்று இரண்டாகி விட்டது. ஹிந்தி கேட்பதும் மிக குறைவாகி விட்டது.

இன்று ரெஸ்டாரண்ட் ஓனர் போனவுடனேயே ஹிந்தியில கதை அடிக்க ஆரம்பிச்சுட்டார். திருப்பி ஹிந்தியிலே பேசும் போது நமக்கு வார்த்தைகள் தடுமாறும். அவங்களுக்கும் நான் பேசத் தடுமாறரது தெரியும். இன்னிக்கு என்னமோ சரளமாக வந்துச்சு. எனக்கே ஆச்சிரியமாக இருந்துச்சு. என்னடா இது பேசியே ரொம்ப ரொம்ப நாளாச்சு. கடக் முடக்ன்னு ஒரு கச்சரா ஹிந்தி வாயிலிருந்து விழுமேன்னு எப்போதும் பேசத் தயங்குவேன்.

இன்னிக்கு நமக்குப் பிடிச்ச அந்த பஞ்சாபி சாப்பாட்டைப் பார்த்தவுடனே வார்த்தையும் தானா வந்து கொட்டிச்சு! எதிர்பார்க்கலை. நாலு வரி பேசினாலும் நசுங்காம வந்துச்சு!

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: