ஒரு நாட்டில் கடும்பஞ்சம் வந்தாலோ, வெள்ளம் அல்லது ஒரு மிகப்பெரிய பிணி/நோய் வந்தாலோ, முன் காலத்தில் பொது மக்களின் பங்கு மகத்தானதாக இருந்தது.
அரசு இயந்திரங்கள் இயங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், மருத்துவமனைகள், மருத்துவத் துறை மக்கள் இயங்குவது ஒரு பக்கம் என்றாலும், பொது மக்களும் தாங்கள் இதில் அதிகம் பங்கேற்க முடியும்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால், பக்கத்திலுள்ள பள்ளிகள் கல்லூரிகளை பகுதி நேர மருத்துவமனையாக மாற்றிட உதவலாம்.
மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்துக் கொடுக்கலாம்.
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கலாம்.
கூட்டங்களை, ஊர்வலங்களை, திருவிழாக்களை, இறுதி ஊர்வலங்களை, வெளியூர் பயணங்களைத் தவிர்க்கலாம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்துதவ முன் வரலாம்.
தடுப்பூசி கிடைக்கும் இடங்களை அறிந்து மக்களைக் கூட்டிச் செல்ல உதவலாம், கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.
தடுப்பூசி மக்களிடம் பரவலாக சென்றடைய இன்றைய காலத்தில் frontline workers மட்டும் போதாது.
தடுப்பூசி ஸ்டாக் நிறைய இருக்குன்னா, இங்க வீணாப்போறதுக்கு முன்ன கூப்பிட்டு கூப்பிட்டு இப்ப கொடுக்கிற மாதிரி, இந்தியாவுல பஸ் நிலையத்துல, ரயில் நிலையத்துல, கல்யாண மண்டபங்களில் போர்க்கால ரீதியில் செயல்பட்டு கொடுக்க முன்வரனும் இப்ப. அதற்கான நேரம் வந்துருச்சு இப்ப! பொது மக்கள் அதற்கு உதவலாம், ஏற்றுக்கொள்ளலாம்.
பொது மக்களின் பங்கும் மகத்தானது!
செய்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !
No comments:
Post a Comment