Friday, April 23, 2021

பொருளாதார விடுதலையே

அம்மா கடைசி வரைக்கும் சொல்லிகிட்டு இருந்தாங்க, உங்களை மாதிரி நாலு வார்த்தைப் படிச்சிருந்தா நாலு காசு சம்பாதிச்சு சுயமா நின்னுருக்கலாம்பாங்க. 

இத்தனைக்கும் வீட்டுல அம்மா வச்சது தான் சட்டம். அம்மா தான் வீட்டு ஃபைனான்ஸ் மேனேஜர் கூட. அம்மா கூட இருந்தவரைக்கும் அம்மா காசு கொடுத்தா தான் எங்களுக்கு. கடைசி வரைக்கும் தன்னோட பேங்க் அக்கௌண்ட்டைத் தானே தான் மெயின்டைன் பண்ணிகிட்டாங்க. கையெழுத்து போட மட்டும் தான் தெரியும். கசினை வச்சு தான் செய்துப்பாங்க, ஆனாலும் ரொம்ப கெட்டி.

கடைசி வரைக்கும் சொன்னாங்க, உங்கப்பா எல்லா காசையும் சம்பாதிச்சு என் கையில கொடுத்துட்டு நீ பார்த்துக்கன்னு பேசாம இருந்து நல்ல பேரை வாங்கிட்டுப் போயிருவாரு. படற கஷ்டம் கெட்டப்பேர் நமக்குத் தான். என்ன, ஒரே ஒரு திருப்தி, பசங்க எல்லோரையும் நல்லா வளர்த்தாச்சு, கடைசி வரைக்கும் உங்க யாருக்கும் ஒரு கடன் வைக்காமப் போறோம்பாங்க.

நானும் என் கசின்ஸ் எல்லா பெண்களுக்கும் சொல்வது இது தான். ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு தன் தந்தையோ புருஷனோ எந்த ஆணோ கிடையாது. உங்களுக்குத் தேவை நல்ல படிப்பு, சுயமா சம்பாதிக்கிற ஒரு வேலை, முக்கியமாக financial independence. இது தான் ரொம்ப முக்கியம். கடைசி வரைக்கும் நீங்க நிற்க இது தான் உதவும்பேன்.

பெண்கள் இருக்கிற வேலையை விட்டுவிட்டு, குழந்தையைப் பார்த்துக்கனும், day care செலவுக்கு நாமளேப் பார்த்துக்கலாம்ன்னு பல பேர் சொன்னாங்க. அப்பவெல்லாம் சொல்வேன், ஒருத்தர் சம்பளம் முழுசா போனாலும் அது அஞ்சாறு வருஷம் தான் போவும், ஆனால் ஜாப் கன்டியூனிட்டி மற்றும் பல பெனிஃபிட்கள் விட்டு போகும். 

இன்னொரு க்ரூப் கேட்கும், பணமா சேர்த்து வச்சு பணத்தை என்ன பண்றதுன்னு. வேலைக்குப் போய் வாழ்க்கைப் போச்சேன்னு. அவர்களுக்கு சொல்வதும் இது தான். இருக்கிற பணத்தை நிர்வகிப்பதற்கும், வீட்டிலுள்ள ஆண் போன பிறகு தனியாக நிற்கும் போதும், நாம செய்யுற வேலை, சுயமாக வளர்த்துக்கிற independence தான் காப்பாத்தும்.

இப்ப இன்னாத்துக்கு இத்தனையும்கறீங்களா!

வீட்டுல சும்மா உட்கார்ந்து வொர்க ஃபரம் ஹோம்ல வேலை செய்யும் போது, நம்ம அம்மிணியிலிருந்து, வீட்டு maid service ஆட்கள் (பெண்கள்) வந்துவேலை செய்து போகும் போது

அம்மா சொன்ன வார்த்தைகளின் நினைவுகளில்
வாழ்வினிது
ओलै सिरिय !

4 comments:

Unknown said...

EXCELLENT. Very much true swami padmanaban

ஓலை said...

நன்றி பத்து. 🙏

Venkatakrishnan said...

You were blessed with good parents! Our regards to them

ஓலை said...

நன்றி