Tuesday, April 27, 2021

மருத்துவமனை நிவாரணி

 பிணிக்காலங்களில் மருத்துவமனையை நோக்கி ஓடுவோம். அங்க போய் ட்ரீட்மண்ட் கிடைக்குமான்னு பார்ப்போம். மருத்துவனைக்குள்ள டிபார்ட்மண்ட் தேடி அலைய விடுவாங்க, அதைத் தேடுவோம். என்ன மருந்து கிடைக்கும், எப்படி பெட் கிடைக்கும்ன்னு தேடுவோம்.

எல்லாத்துக்கும் மேல எப்படி அதுக்கு துட்டு கட்டுவோம்ன்னு கவலைப்படுவோம். அதுக்கும் மேல உசுரு பிழைப்போமான்னு தான் நினைப்போம்.

ஆனால் இந்த மருத்துவமனைகளை யார் கட்டினான் யார் காலத்துல கட்டினான்னு தேடிப் போய் எவரும் மருத்துவம் பார்த்ததில்லை.

இப்ப இணையத்துல மருத்துவமனைகளை யார் கட்டினாங்கன்னு அட்டைக்கத்தி, சோளக்கம்பு சுத்தறவங்களைப் பார்த்தா, வருங்காலத்துல இப்படியும் வந்து நிக்குமோ:
- பருப்புக்கு ஒரு மாநிலம்
- பூசணிக்கு ஒரு மண்டபம்
- இலுப்பைச்சட்டிக்கு ஒரு மருத்துவமனை
- தேங்காய்க்கு தடுப்பூசி

இந்த நோய்க்கு மருந்தில்லையே!

இவிங்களுக்கு ஒரு சர்வலோக நிவாரணி கிடைச்சா

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: