Thursday, April 22, 2021

அந்நிய மண்ணில் நம் பழைய வழக்கங்கள்

 மாவடு், மாகாளி, நெல்லிக்காய் ஊறுகாய் ஒரு வேளையாவது எனக்குக் கிடைச்சா அன்றைய நாளில் நான் அடையும் சந்தோஷம் அளவிடாது.

நல்ல மாவடு கிடைக்க திருச்சி ஆண்டாள் தெருவுல இப்ப யாரை அலையவிடறது. அதனால இங்க கிடைக்குற ஏதோ ஒரு tender மாங்காயை வாங்கி இளைப்பாருவேன்.

பாட்டிலிலுள்ள மாவடு தீர்ந்த பின் அந்த காரத்தண்ணியை வெளிய கொட்ட மனசு வராது. கடைக்குப் போய் ஒரு சின்ன கிளிமூக்கு மாங்காய் வாங்கி துண்டம் போட்டு அதுல ஊறவைச்சு வழிச்சுருவேன்.

மாவடு தண்ணியில மாங்காய்த் துண்டம் டேஸ்ட் மாறி ஒரு மாதிரி இருக்கும். இருந்தாலும் விடுவதில்லை. பாட்டிலை சுரண்டிறது தான்.

இந்த தடவை கடையில் காய்ந்த நெல்லிக்காய் வத்தலைப் பார்த்தேன். வாங்கி இரண்டு மூனு வாயிலப் போட்டுப் பார்த்தேன். சகிக்கிலை. இது என்னடா சோதனைன்னு நினைக்கையில, மாவடு பாட்டிலும் தீர்ந்து போய் ரெடியாகி நிற்க, அந்தக் காரத்தண்ணியில பாதி நெல்லிக்காய் வத்தலைக் கொட்டி வச்சுருக்கேன். ஊறட்டும், பிறவு பார்ப்போம் வாழ்வினிதா கசக்குதான்னு!

2) அன்னிக்கு அந்த ஆந்திரா குண்டூர் நெல்லிக்காய் வாங்கி வந்ததலிருந்து கொஞ்சம் சுகவாசமாயிடுச்சு. மதியம் இரவு தயிர்சாதம் நெல்லிக்காய் சொர்க்கத்தில் தான் ஓடுது.

அந்த தெலுகு குடும்பம் இன்னும் கொஞ்சம் ஊறுகாய் வித்து போகலைன்னு சொன்னாக. அம்மிணி உடனே இன்னொரு செட் அவங்ககிட்டேர்ந்து லவட்டிட்டாங்க! அதை இரவோடு இரவா வாங்கிட்டு வரப்போனேன். வீட்டுக்காரர் கதவைத் திறந்து வாசப்படியில் கொடுக்க, நான் அதற்கானப் பணத்தை நீட்டினேன். 

அவருக்கு 30-35 வயது தானிருக்கும். நடுக்கதவு இடுக்கில் வாசப்படியில் பணம் வாங்க வேண்டாம்ன்னு, வெளிய வந்து வாசலில் நின்னு பணத்தை வாங்கி கண்ணுல ஒத்திகிட்டு போறார். பணமில்லையா, அதான் வாசப்படியில் வேண்டாம்ன்னார்.

நம் சின்ன வயசு சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் பண்பாடு பளிச்சுனு அந்த இளவயசு தெலுங்கு குண்டூர் வாலிப மக்கள் இங்க வந்தும் கடைபிடிப்பதைப் பார்த்து சந்தோஷமாக இருந்துச்சு. ஊறுகாய் பிரமாதம்ன்னு சொல்லிட்டு வந்தேன். அவங்களுக்கும் மிகமகிழ்ச்சி!

நம் மண்ணின் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் பண்பாடு கலாச்சாரத்தை இம்மண்ணில் பார்க்கும் போது

வாழ்வினிது
ओलै सिरिय !

2 comments:

Venkatakrishnan said...

Wherever we live, our traditons will be there with us. Nice to learn about the youngsters who still follow them. Not sure whether the next generation will retain them

ஓலை said...

நன்றி