Saturday, March 5, 2022

பட்டங்கள் காகிதமா எனும் புரட்டல்கள்

சில நாட்கள் முன் நான் எழுதிய ஒரு பதிவில் கல்லூரியில் கிடைக்கும் பட்டங்கள் நமது வாழ்விற்கு அது ஒரு ஆரம்பப் படிக்கட்டு் என குறிப்பிட்டு இருந்தேன்.

அதே பதிவில் ஐஐடியில் படித்து பட்டம் வாங்கியிருந்தாலும், வரும் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மேலும் தன்னை வளர்த்துக் கொண்டு வளர்பவர்களால் மட்டுமே ஒரு சுந்தர்பிச்சையாகவோ, விஞ்ஞானியாகவோ, மற்றும் பலதுறைகளில் ஒளிர முடியும் என்று எழுதியிருந்தேன். இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் நிறைய பட்டங்களை சேர்ப்பது அது, அந்த பட்டங்கள் வெறும் ஒரு காகிதமாகத் தான் நிற்கும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதற்கு என்னையே உதாரணமாகக் கூடச் சொல்லியிருந்தேன்.

மேலும் அதே பதிவின் ஆரம்பத்தில் ஒருத்தர் படிக்க முடியாமற் போவதற்கு காரணம் பெரும்பாலும் ஒருத்தரின் குடும்ப மற்றும் அவர்கள் பொருளாதார சூழ்நிலை மட்டுமே இருக்கும், ஆனால் அதை சமூகத்தின் மேல் போடுவது இயல்பானதாய் இருக்கும் என்றே குறிப்பிட்டு இருந்தேன்.

தன் சொந்த இயலாமையை, குடும்ப உறவு மற்றும் பொருளாதார சூழ்நிலையை சமூகத்தின் மேல் மற்றும் வேறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மேல் போடும் இவர்களது நுண்ணரசியல், இவர்களது கட்டமைப்பு,  ஒரு நாள் சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் சரிந்து விழுவதைப் பார்ப்போம் என்றும் சொல்லியிருந்தேன்.

அவ்வாறே என் பதிவின் சாராம்சத்தை எதுவும் புரிந்து கொள்ளாமல், பட்டங்கள் வெறும் காகிதங்கள் எனச் சொன்னதாகவும், இத்தகையவர்களின் நுண்ணரசியலாகச் சித்தரிக்கிறார்கள்.

அவரவர் புரிதல், அவரவர் அரசியல், அவரவரது.

தவறான புரிதலில் கட்டமைக்கும் பொய்கள் என்றும் உண்மையாகிவிடாது. சீட்டுக்கட்டு மாதிரி.

நம் பயணத்தில் எவற்றையும் எதிர்கொள்வதில்
வாழ்வனிது
ओलै सिरिय ।
¡Hola!

No comments: