Wednesday, November 24, 2021

மருத்துவனுக்கு சமர்ப்பணம்


உயிர் விடும் தருணம்

  இதயம் அசையவில்லை

உயிர்ப்பிக்கும் கைகள் அசைத்தாலும்

  உயிர்ப்பிப்பவனின் இதயமே எழுகிறது!


எவர் சொல்லி எழுவார்

  எழுப்புவன் குரல் கேட்காதோ

பிஞ்சுக் கைகள் தொடுவது அறியாதோ

  குழந்தை மனம் கனக்காமலிருக்கட்டும்!


பிறப்பும் இறப்பும் எவர் கையில்

  வாழ்விப்பதும் உயிர்விப்பதும் உன் கையில்

எழுவார் எழுவர் எழுவாதோர் விழுவர்

  விழாமல் இருக்க வேண்டும் இளமனசு!


பணியில் பார்ப்பது பலவற்றை

   உறையில் இருத்தாமலிருந்தால் கனக்காது

உன் கடன் பணி செய்து கிடப்பதே

  பணியோடு போவட்டும் உணர்ச்சிகள்!


அலைபாயும் உறவின் மனதில்!


மனம் கணக்காமலிருந்தால்

வாழ்வினிது

ओलै सिरिय ।

No comments: