Sunday, June 18, 2023

க்ளீவ்லேண்ட் ஆராதனை 2023

எடுபுடி வேலைக்கு ஆசைப்பட்டுப் போனா அது மட்டும் அப்படியே 100 பர்சண்ட் நடக்கனுமா! கொஞ்சம் இடைவேளை கொடுத்து இரண்டு கச்சேரியாவது பார்க்க வாய்ப்பு கிடைச்சுருக்கக் கூடாதா! 

கிடைக்கலையே! சித்தாள் வேலைக்குப் போய் பொதி சுமந்ததோட சரி!

அது கிடக்கட்டும், பழகிப் போச்சு நமக்கு!

புதன்கிழமையே போக வேண்டிய பிராக்டீஸ்க்குப் போக முடியலை, வியாழனும் மிஸ்ஸிங். வெள்ளைக்கிழமை காலை ஐந்தரைக்குப் புறப்பட்டு மதியம் 3க்குத் தான் போய்ச் சேர்ந்தோம்.

அன்றைய மாலை பிராக்டீஸ்லயே விதுஷி நிர்மலா ராஜசேகர் சொல்லிட்டாங்க, உங்களுக்காக ஒரு தனி பீஸ் வச்சுருந்தேன்மா, நீ நேற்று வரலை, இப்ப இரண்டு வேளை பிராக்டீஸ்ல ரிஸ்க் எடுக்க முடியாதுன்னுட்டாங்க. ஒரு நல்ல சான்ஸ் போச்சு, ஆனால் அம்மிணிக்கோ இவங்க உள்ளே விட்டதே பெரிய விஷயம்ன்னு இருந்துட்டாப்புல. அப்பவும் ஒரு இடத்துல ஸ்வரம் வாசிக்க இடம் கொடுத்தாங்க. ஆனால் அடுத்த நாள் ப்ராக்டீஸப்ப வித்வான் தஞ்சை முருகபூபதி தனி ஃபீஸ் பலவற்றை தள்ளுபடி செய்துட்டார்.

வெள்ளி இரவு பிராக்டீஸ் முடியரப்ப விதுஷி நிர்மலா ராஜசேகர் ஒரு போனஸ் கொடுத்தாங்க பாருங்க! அசந்து போயிட்டோம். உச்சி குளிர்ந்து போச்சு.

அடுத்த நாள் காலை நடக்கவிருக்கும் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனை க்ருதிகளில் பங்கேற்க தன்னோட ஸ்டூடண்ட்ஸ் ஆறு பேருக்கு இடம் வாங்கியிருப்பதாகவும் அதில் அவங்க பின்னாடி உட்கார்ந்து வாசிக்க அம்மணிக்கு முதல் வாய்ப்பு கொடுத்தாங்க பாருங்க, உச்சி குளிர்ந்து போச்சு.

இத்தனை வருடங்கள் அங்கு போனதில் அரங்கில் நிற்கக்கூட இடமில்லாம ஒடுங்கி நெருங்கி பார்த்து திரும்பி வந்தது எங்கே, இப்ப அதே மேடையில அவங்க பக்கத்துல உட்கார்ந்து வாசிக்க அம்மிணிக்கு அவங்களே வாய்ப்பு கொடுத்தது எங்கே!

ஆறில் ஒரு இடம் பாக்கி இருந்தது, யார் வர்றீங்கன்னு கேட்டதில் அம்மிணியோட மாணவிக்கு 4 கீர்த்தனைகள் கத்துக் கொடுத்தது தெரியும்கிறதினால் அந்த மாணவியை நானும் அம்மிணியும் புஷ் பண்ண, அந்த பொண்ணு தான் இப்ப ப்ராக்டீஸ் பண்ணலை வரலைன்னுடுச்சு. வீணை ஒன்னு இரண்டு கீர்த்தனைக்காவது வாசி மத்ததுக்கு சும்மாவது வந்து உட்காருன்னு அவங்களே சொல்லியும் கூட அந்தப் பொண்ணுக்குத் தயக்கம். நல்ல வாய்ப்பு போச்சு. என்ன இப்படி பண்ணிட்டியேன்னு அந்தப் பொண்ணுகிட்ட வருத்தப்பட்டேன். அடுத்த வருடத்திற்காவது ரெடி பண்ணிக்கச் சொல்லியிருக்கேன்.

தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்ன க்ருதி வைபவத்தில் சுதா ரகுநாதன், நெய்வேலி, திருச்சி சங்கரன், நாகை முரளி, திருவாரூர் வைத்தியநாதன், காயத்ரி கிரீஷ், சசிகிரண், கிர்ணாவளி, கணேஷ், சந்தீப் நாராயண், ஜெயந்த், லால்குடி வாரிசுகளெல்லாம் நடுநாயகமாக அலங்கரிக்க, விதுஷி நிர்மலா ராஜசேகர் தனது பரிவாரங்களுடன் மேடையின் வலது கோடியில் அலங்கரிக்க, 500 பேர் அமர்ந்து பாடிய/இசைத்த/தாளமித்த ஒரு அமர்களமான அரங்கேற்றம்.

கிடைத்தர்க்கரிய ஒரு வாய்ப்பு கிடைத்த பெருமிதம். 10000 பேர் பக்கம் இருந்த அரங்கில் மேடையில் 500ல் ஒருவராக. இவ்வளவு தூரம் பயணம் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பரிசு.

நிறைவானதொரு ஆராதனை!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La música es divina y talentosa!
ஏப்ரல் 14 2023

No comments: