Sunday, June 18, 2023

காரைக்குடி மணி அஞ்சலி

2018ல் க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை போயிருந்தப்ப பல முன்னணி கர்னாடிக் சங்கீத வித்வான்கள் மற்றும் விதுஷிகளை மிக அருகில் நின்று பார்க்க முடிந்தது, நேரில் கேட்க முடிந்தது. கூட நின்று படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.

இந்த 2018ம் ஆண்டு ஆராதனையை சிறப்பாகக் குறிப்பிடனும்ன்னா இதில் சில stalwartsன் கச்சேரிகளை கேட்டதும் அவர்களைப் பார்த்து பிரமித்ததும் கூட. தள்ளாத வயதிலும், நடப்பதற்கே சிரமப்படும் நேரத்தில் கூட அவர்களது வித்வத்வம் வாசிப்பில் ஒரு குறையுமில்லாமல் ஒரு இருபது வயது வாலிபனைப் போல தங்களது திறமையைக் காட்டினார்கள். என்ன ஒரு பெரும் அதிர்வு அந்த வாசிப்பில்!

அவர்களில் அன்று நான் கண்டு பிரமித்த இருவர் டி என் கிருஷ்ணன் மற்றும் காரைக்குடி மணி. இவர்கள் இருவரது கச்சேரிகளும் தனித் தனி, ஆனால் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவுக்கு மிகச்கிறப்பான ஒன்று. ஆடியோ ரிக்கார்டிங் வைத்துள்ளேன்.

இன்று இந்த இருவரும் இம்மண்ணில் இல்லை. காரைக்குடி மணியும் இந்த வாரம் தன் வாசிப்பை நிறுத்திக் கொண்டார். ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள்.

இணைப்பில் கொடுத்துள்ள வீடியோ அன்று ஆராதனையில் எடுத்தது. அன்று பட ஊர்வல அழைப்பில் தியாகய்யரின் உருவப்படத்தை சென்னை தூர்தர்ஷன் டி வி வரதராஜன் எடுத்து வர அவர் அருகில் காரைக்குடி மணி அவர்களை அழைத்து வந்து க்ளீவ்லேண்ட் சுந்தரம் மாமா நிறுத்தி வைத்து அவர் கையில் ஒரு கிருஷ்ணர் சிலையை கொடுத்து எடுத்து வரச்சொன்னார். 

சுந்தரம் மாமா அவர்களோடு முன் வரிசையில் வராமல் எங்களைப் போல் ஓரமாக ஒதுங்கி வந்தார். நான் அவரை திருப்பி அனுப்பி காரைக்குடி மணி மற்றும் வரதராஜனோடு சேர்ந்து வர அனுப்பி வைத்தேன்.

இணைப்பிலுள்ள இந்த வீடியோவை யாரோ தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். ஆகவே எண்ணிக்கை 40கே தாண்டி விட்டது.

டி என் கிருஷ்ணன் சார் அன்று நடப்பதற்கு மிக சிரமமான நிலையில் இருந்தார். காரைக்குடி மணி சாரை கண் கொட்டாமல் பார்த்த பொழுதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los incondicionales de la música nunca descansa.!
ஆழ்ந்த அஞ்சலிகள் காரைக்குடி மணி சார் 🙏
மே 4 2023

No comments: