Friday, July 15, 2022

பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை

1986ல் திருச்சி ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க உள்ள நுழைஞ்ச போது எனக்கு 22 வயது. இது வரை படித்துப் பெற்ற பட்டங்களை வச்சு வேலை வாங்குறது கஷ்டம், இனி வருங்காலம் கம்ப்யூட்டர் கையில் தான்னு புரிய ஆரம்பிச்சு அதுல எப்படியாவது சேர்ந்து படிக்கனும்ன்னு ஒரு புரபசர் உதவியோட மாலை நேரக் கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பிச்சேன்.

கல்லூரியில் நாலு dumb terminals, கம்ப்யூட்டர்ல இருந்த மெமரி 16kb தான். வாரத்தில் இரண்டு நாள் 40 நிமிஷம் கம்ப்யூட்டர் முன் கிடைக்கும், அந்த குறுகிய நேரத்திற்குள் நாம எழுதிகிட்டுப் போன ப்ரோக்ராமை பன்ச் பண்ணி, error proof பார்த்து ஓட வைக்கனும். அங்க போய் புதுசா எழுத நேரமில்லை. அப்படி எழுதி கத்துகிட்டது தான் basic, cobol, fortran. Pascal பின்னாடி கத்துகிட்டேன். தஞ்சை LIC போனப்ப அவங்க punched card system reader வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருந்தாங்க.

காலை நேரத்துல அப்ப இருந்த அரசியல் உணர்வோடு வங்கி வாசல்லையும் இன்சூரன்ஸ் கம்பெனி வாசல்லையும் போயி, வங்கிகளிலும் இன்சூரன்ஸிலும் கம்ப்யூட்டரைப் புகுத்தாதே வேலை வாய்ப்பைப் பறிக்காதேன்னு கத்திவிட்டு வருவேன்.

மாலை நேரத்துல உட்கார்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், ப்ரோக்ராம் படிப்பேன். படிக்கும் போது தான் இந்த விஞ்ஞான வளர்ச்சி எப்படியெல்லாம் உதவப்போகிறதுன்னு புரிய ஆரம்பிச்சுச்சு.

என்னோட இந்த காலை மாலை முரணான இரட்டை நிலையை நினைச்சு ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்ச காலம் அது. வயசும் 22 தான். எல்லாவற்றையும் ஒரேயடியாக புரிஞ்சுக்கிற வயதல்ல. இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சியை குறை சொல்ல மற்றும் தடுக்கக் கூடிய சக்தியாக எனது செயல் இருந்ததை நினைத்து வருந்தியது உண்டு.

இப்ப இந்த 35 வருட வளர்ச்சியில் பார்த்தால் கம்ப்யூட்டர் உள்ளே நுழையாத ஒன்று கூட இல்லை என்று சொல்லலாம். Arts, literature, medical, astronomy, ஆன்மீகம், archaeology, architecture, science, biology, chemistry, veterinary, history and geography, கம்யூனிகேஷன் என எல்லாயிடத்திலும் கம்ப்யூட்டர், அது உள்ளே புகாத இடமே கிடையாது இப்ப. அதன் மூலம் எந்த ஒரு நாடும் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்.

சிலர் எழுதுகிறார்கள்: ஆர்ட்ஸ், literature, கவிதையெல்லாம் எழுதிகிட்டு இருக்கிறவனுக்கு விஞ்ஞானத்தைப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு. ரைட்டு. அது அவர்கள் ஒபீனியன். நடைமுறையில் அதுவல்ல எவரது வாழ்க்கையும்.

நேற்று நாசா வெளியிட்டுள்ள டெலஸ்கோப் இமேஜை வச்சுகிட்டு பலர் தனக்கேற்றவாரு எல்லோரும் உருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி, அது மற்றவைகளைப் புரட்டிப் போடப் போகிறதென.

என்னைப் பொருத்தவரை இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டர் வளர்ச்சி எவ்வாறு அனைத்து துறையினருக்கும் உதவியதோ, அது போல இதுவும் அனைத்து துறையினருக்கும் உதவக்கூடிய ஒன்றாக மாறலாம். ஒவ்வொருவருடைய தேடலும் அவரவரது தேவை, நம்பிக்கை, வாழ்வியல், வளர்ச்சி என தேவைப்படும் ஒவ்வொன்றுக்கும் இதிலிருந்து அவர்கள் எதை வேணுமானாலும் தேடி எடுக்கலாம். அத்தகைய கண்டுபிடிப்பாக இந்த பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை நமக்கு ஒளி வீசட்டும்.

விஞ்ஞானம் அனைவருக்கும் சொந்தமானது. அவரவரது தேவைக்கேற்ப இதில் தேடிக்கொள்வார்கள்.

தடைகளை கண்டு அஞ்சாத எறும்பு போல் ஊர்வோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los inventos científicos son para todos!

நம் பணத்தின் மதிப்பு

25 வருடமுன்ன இங்க வரும் போது கையில ஒரு 200 டாலராவது எடுத்துகிட்டு வரனும்ன்னு கையில இருந்த அத்தனை பணத்தையும் துடைச்சி எடுத்து மும்பையில் டாலராக மாத்தினேன். அப்ப மார்க்கெட் ரேட் ஒரு டாலருக்கு 26 ருபாய். தாமஸ் குக் அவங்க கமிஷன் போக குறைவாகவே கொடுத்ததை வாங்கிட்டு வந்தேன்.

இங்கு வந்து ஏழெட்டு வருடம் கழித்து மிகவும் வேண்டிய ஒருத்தருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பினேன். நான் கொடுக்க வேண்டிய பணம் அது, கொடுத்து விட்டேன். அப்ப கன்வர்ஷ்ன் ரேட் 40 ரூபாய் பக்கம். நான் அனுப்பிய தொகை 2500$. ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்பியது, ஆகவே அதை கணக்கு போடுவது சரியல்ல. அதைப் பற்றி விமர்சிப்பதும் சரியல்ல. நான் கொடுக்க வேண்டிய பணம்.

பின்னாடி சில வருடங்கள் கழித்து ஒரு டாலர் மதிப்பு 62-63 ரூபாய் ஆகி விட்டது. ஆனால் அப்பவும் அவர் அதைக் குறிப்பிடும் போது தான் ஒரு லட்சம் மட்டும் பெற்றதாகக் குறிப்பிடுவார். மறந்து போய் கூட 2500$ என சொல்லி விட மாட்டார். ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1500$ ஆக குறைந்து விட்டது. நான் கொடுக்க வேண்டிய பணம் தான்.

இப்போது ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாய் என காண்பிக்கிறது இன்று. ஆக, அந்த 2500$ன் மதிப்பு இப்ப 1250$ தான்.

இது தான் நம் பணத்தின் மதிப்பு. இதில் ஏற்ற தாழ்வு பார்ப்பது என்ன. பொருளாதாரம், பண மதிப்பு அறிந்தவன் தான் நான்.

அமைதியா இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Valor del dinero!

எரி பொருள்

இப்பவெல்லாம் கெரசின்/மண்ணெண்ணை கிடைக்குதா அங்க? இப்ப நான் பார்த்ததெல்லாம் அங்கு பெரும்பாலும் கேஸ் ஸ்டவ் மற்றும் எலக்டிரிக் தான். தெரிந்து கொள்ள.

என் சின்ன வயசுல, ரேஷன் கடையில க்யூவில நின்னு அவங்க கொடுக்கிற வாரம் இரண்டு லிட்டர் வச்சு தான் வீட்டுல சமையல். இல்லாட்டி குமுட்டி தான். இதெல்லாம் அப்ப காஸ்ட்லியான ஐட்டங்கள். கிடைப்பதும் கஷ்டம். 

ஐந்து லிட்டர் கெரசின் ரேஷன்ல கிடைச்சுதுன்னா அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம் பார்ப்போம். அந்த வாரம் ஏகப்பட்ட பட்சணங்கள் பண்ணுவாங்க.

பெரும்பாலும் குளிக்க சுடு தண்ணிக்கு விறகடுப்பு தான். அதுல அம்மா சமைக்க விரும்ப மாட்டாங்க. கஷ்டம் கூட.

அஸ்ஸாம் போனப்ப தான் தனியாக சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, முதல் முதலாக ஒரு திரி ஸ்டவ்வும், பம்ப் பண்ற ஸ்ட்வ்வும் வாங்கினேன். 

ஆனால் அதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காது. அஸ்ஸாமில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவருக்கு, வெளி மாநிலத்தவருக்கு ரேஷன் கார்ட் கிடையாது. தர மாட்டார்கள். அதுவில்லாமல் கெரசின் வாங்க முடியாது. ரேஷன் கடை தவிர மற்ற கடைகளில் கெரசின் கிடைப்பதும் அரிது. 

வேற வழியில்லாமல் அந்த ரேஷன் கடைக்காரர் கிட்டயே தெரிஞ்ச அரைகுறை இந்தியில் பேசி அவர் கொடுக்கிற விலைக்கு வாங்கி வந்து உபயோகித்திருக்கிறேன்.

கேஸ் அடுப்பெல்லாம் அப்ப தான் அறிமுகமாகி வந்த நேரம். முதலில் கனெக்‌ஷன் கிடைக்காது. அதற்கும் ரேஷன் கார்ட் கேட்பார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி. வாங்கிய சம்பளத்துக்கு வேலைக்காவது. மேலும் ஒரு ஆளுக்கு ஒரு சிலிண்டர் தேவையற்ற ஒன்று. குளிர்காலத்தில் அஸ்ஸாமில் குளிர் பின்னிரும். அப்ப வெந்நீர் சுடுதண்ணி இல்லாம ஒன்னும் வேலைக்காவாது. அதற்குத் தான் பெரும்பாலும் அதிகம் எரிபொருள் செலவாகும்.

மும்பை வந்த பிறகு கேஸ் அடுப்பு சுலபமாக கிடைத்து. இரண்டாவது சிலிண்டர் கிடைக்க அப்ப பெரிய கஷ்டம். ஒரு சிலிண்டர் தீர்ந்து போனால் வாங்க அடுத்த 45 நாட்கள் வைட் பண்ணனும். இன்னொரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் கிடைச்ச மாதிரி தான். அசாமில் ஒரு கேஸ் ஸ்டவ் வைத்திருந்தாலே அதுக்கு ஒரு தனி கௌரவம் அப்ப உண்டு.

இங்க வந்த நாள் முதல் எலக்ட்ரிக் ஸ்டவ் தான். வீடு, அபார்ட்மெண்ட்டோடு சேர்ந்தே வந்துரும். அணில் கடிக்காது. அதிகம் பிரச்சனை சந்தித்ததில்லை. மேலும் இங்கு ஒன்னு கிடைக்கலைன்னா அடுத்ததை நோக்கிப் போய்கிட்டே இருப்பாங்க மக்கள். அவரவர் வாழ்க்கை அவரவரது தேவைக்கேற்ப அமைத்துக் கொள்வர்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Combustible para cocinar!

வரி வட்டி கிஸ்தி

வரி வட்டி கிஸ்தி

இங்கிருக்கிற பல மாநிலங்களில் அரசிற்கு சாலை போக்குவரத்து, பிரிட்ஜ், ferries மற்றும் இன்னும் சில வகைப் போக்குவரத்து துறைகளுக்கு எல்லாம் சேர்த்து பெரும்பாலும் வருடத்திற்கு 800 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரை செலவாகுது. இது தான் ஒரு வருட அரசு போக்குவரத்து பட்ஜெட்டாகச் சொல்லுவார்கள். நாமும் இதை வெளிப்படையாகப் பார்க்கலாம். 

இதற்குப் பெரும்பாலும் நாம நம்ம வண்டிகளுக்குப் போடுகிற பெட்ரோல் டீசலிலிருந்து நாம போடற ஒரு கேலனுக்கு 2$ - 3$ வரை கட்டினால் அதில் 35 செண்ட்லிருந்து 70 செண்ட் வரை அரசுக்கு வருமானம் வரியாகக் கிடைக்கும். இதை வைத்து தான் நீங்க ரோட்டுல பார்க்கிற புது ரோடுகளும், புது பிரிட்ஜ் மற்றும் பழையதை புதுப்பிக்கிற வேலைகள் கிடைக்கும்.

முன்பெல்லாம் ஒரு கேலனுக்கு 20-25 மைல் வண்டிகள் ஓடிகிட்டு இருந்தப்ப, ஒருத்தர் வருடத்திற்கு 12000-15000 மைல் வரை கார் ஓட்டினால் அவர்களிடமிருந்து அரசுக்கு வருடத்திற்கு 220-250$ வரை வரி கிடைத்து வந்தது.

பிரசிடண்ட் ஒபாமா காலத்தில் வண்டிகள் குறைந்த பட்சம் 35 மைல் ஒரு காலனுக்கு கொடுக்கனும்ன்னு அரசு உத்தரவு வந்த பிறகு, இப்பவெல்லாம் மாநிலங்களுக்கு அந்த 220$ வருமானம் 160$க்கும் கீழே இறங்கிடுச்சு.

அடுத்து இப்ப எல்லோரும் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் வாங்க ஆரம்பிக்க, அரசுக்கு இப்ப வருமானம் அதிலிருந்து சுத்தமாக நின்று போய் விட்டது. அவர்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லாததால்.

மேலும் இமிக்ரேஷன் டைட்டன் பண்ணியதில் இப்ப லேபர் கிடைப்பதில்லை. பல பிராஜக்ட்கள் தள்ளிப் போகுது, ரோடு மோசமாகிட்டிருக்கு, ரிப்பேர் பண்ண கால தாமதமாகுது.

இப்ப பட்ஜெட் பற்றாகுறையை எப்படி சமாளிப்பது. வேறெதிலிருந்து வரி போட்டு போக்குவரத்து துறைக்கு செலவளிப்பது. பல மாநில அரசுகளுக்கு இது இப்ப ஒரு தலையாயப் பிரச்சனை.

சில மாநிலங்களில் இவ்வாறு யோசிக்கிறார்கள். பெட்ரோல் டீசல் போடாத வண்டிகள் ஒரு மாதத்திற்கு எத்தனை மைல்கள் ஓடுதோ அதற்கேற்றவாறு வரி வசூலிப்பது என. இனி எலக்ட்ரிக் வண்டி வாங்கிட்டா எந்தப் பிரச்சனையுமில்லைன்னு நினைச்சு ஓட முடியாது ஓட்ட முடியாது.

வருங்காலத்தில் நாம வெறுங்காலில் நடந்தாலும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்ன்னு கணக்கிட்டு வரி போட வந்தாலும் வரலாம். வீட்டுலேயே உட்கார்ந்தாலும் வரி உண்டு.

நம் வாழ்க்கையை நாம் புரிந்து கொண்டு வரியற்ற ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்கும் போது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Pagar impuestos sinceramente!

வீட்டுப்பெண்கள் பேச்சைக் கேளுங்கள்

சின்ன வயசுல பள்ளிக்கூடம் போய்விட்டு சாயந்திரம் 4.30மணிக்கு வீட்டுக்குள்ள நுழையும் போதே இன்னிக்கு அம்மா பூரி மசால் பண்ணியிருக்காங்களா, பக்கோடா, பஜ்ஜி இருக்கா, இல்லாட்டி புளிமாவு அல்லது மோர்க்களி பண்ணியிருக்காங்களா அல்லது முள்ளு முருக்கு தட்டையாவது இருக்கான்னு எதிர்பார்த்தே வருவேன். குடும்பம் பெருசு, அம்மா ஏதாவது செய்து வச்சிருப்பாங்க. எதுவுமில்லைன்னா என்ர முகத்துல பசியில அம்புட்டு கோவமும் பிரதிபலிக்கும்.

இப்ப காலம் வேற.

அம்மிணிக்கு கோவிட் காலத்திலும் தினமும் வேலைக்குப் போயாவனும். சாயந்திரம் உள்ள நுழையும் போதே முகத்தில் பசியில் அவ்வளவு கடுகடுன்னு இருக்கும்.

வர்க் ஃப்ரம் ஹோம்ன்னு சொல்லிகிட்டு வீட்டுல  உட்கார்ந்துகிட்டு துன்கறவனுக்கும் சேர்த்தி இப்ப வந்து என்ன சமைக்கனும்ன்னு யோசிச்சு கிட்டு, இருக்கிற பசிக்கு எதைத் திங்கலாம்ன்னு ஒரு கொலைவெறியோட இருப்பாப்புல.

அம்மிணிக்குப் பிடிக்காத வேலை பாத்திரம் கழுவுற வேலை. அதை மட்டும் செய்ஞ்சு கொடுத்து ஓபி அடிச்சு ஓட்டிருவேன். லன்ச் டைம் மற்றும் கிடைக்குற காபி ப்ரேக் அப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரம் லோடு பண்ணி அம்மிணி வர்றதுக்குள்ள டிஷ் லோடு பண்ணிருவேன். இல்லாட்டி அந்த வெறுப்பும் உச்சி மண்டையில ஏறுச்சுன்னா செத்தோம். எப்படியெல்லாம் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கு.

நேற்று வந்து படபடன்னு உள்ள நுழைஞ்ச ஆளு ஒவ்வொன்னா ஆரம்பிக்க மிக்ஸி வர்க் ஆவலை. தான் பிளான் பண்ணிய எல்லாம் ஆப்பு. அது என்னவா, ஒன்னுமில்லை. வெறும் அதுல தேங்காய்ச் சட்னி அரைச்சு வச்சா பழைய சாம்பர் இருக்கு, இந்த வீட்டுல உட்கார்ந்து துன்கிறவனுக்கு ஐஞ்சு தோசையை வார்த்துக் கொடுத்தா ஆச்சுன்னு நினைப்புல வந்தாப்புல, அதுக்கு ஆப்பு. மிக்ஸி போச்சு.

இருக்கிற அப்செட்ல கன்வெர்ட்டர் ஃப்யூஸ் போயிடுச்சான்னு நேராத் திருவி ஃப்யூஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாப்புல. அரண்டு போயிட்டேன். விட்டா அப்பவே மிக்ஸியை பார்ட் பார்ட்டா கழட்டியிருப்பாப்புல.

படபடப்பா இருக்கிறவங்கிட்ட நிதானமாகப் பேசற பழக்கம் எனக்கு. ஏன்னா சேதாரம் கம்மி பண்ணிக்கனுமில்ல.

கவலைப்படாதே நான் திருச்சி ஶ்ரீரங்கத்திலிருந்து வந்த அந்த அருமையான தோசை இட்லி மிளகாய்ப்பொடியை வச்சு சமாளிச்சுக்கிறேன் டோண்ட் வொர்ரின்னு சொல்லி ஓட்டியாச்சு.

இன்னிக்கு காலையில வேலைக்குப் போகும் போது எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் எடுத்து வச்சு, சாயந்திரம் வர்றதுக்குள்ள சரி பண்ணி வையுன்னு ஒரு லிஸ்ட்டு கொடுத்துட்டுப் போயிருக்காப்புல.

ஒரு நாள் லீவுல சும்மா இருக்கலாம்ன்னா முடியலை. உழைக்கிற பெண்கள் கிட்ட சொன்ன பேச்சு கேட்டு நடந்துக்கங்கப்பா, சேதாரம் கம்மியாக இருக்கும்.

மிக்ஸியை சரி பண்ணிவிட்டு அமைதியாக காலை ஆட்டிக் கொண்டிருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escuchar a las mujeres!

Wednesday, July 13, 2022

பொன்னியின் செல்வன் டீசர்

எல்லோரும் பொன்னியின் செல்வனைப் பத்தியே பேசறாங்க!

கடல்புறா மஞ்சளழகி படம் எப்ப வருமோ!

வரும் வரை காத்திருப்போம்.

பத்தாவது முடிப்பதற்குள்ளயே பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா எல்லா பாகங்களும் படிச்ச காலம் அது.

எனது அண்ணனுக்கும் என் தம்பிக்கும் வயது இடைவெளி ஒன்பது வருடங்கள். இரவில் எல்லோரும் ஒரே ஒரு சின்ன ரூமில் தான் ஒன்றாய் படுப்போம்.

தினமும் என் அண்ணன், என் தம்பிக்கு யவன ராணி கதையைச் சொல்லி அவனைத் தூங்க வைப்பான். நான் என் அண்ணன்ட்ட என்ன நீ இந்த காதல் கதையெல்லாம் இவனுக்கு சொல்லி தூங்க வைக்குற என்ன புரியும் இவனுக்குன்னா, இரண்டு பேரும் என்னை மடக்கிடுவாங்க. யவன ராணி முடிந்து கடல் புறா கூட கொஞ்சம் ஆரம்பிச்சான் அவனுக்கு.

என் தம்பி எனது அண்ணனின் முக எக்ஸ்பிரஷனை வாயப் பிளந்து பார்த்து கிட்டே தூங்கிடுவான்.

அது ஒரு காலம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Historias nocturnas!

நேற்று இந்த போஸ்டை என் அண்ணனுக்கு copy paste பண்ணி அனுப்பிச்சு, இது ஞாபகமிருக்கான்னு கேட்டேன்.

வெரி மச் ன்னு பதில் போட்டான். கூடவே பழசையெல்லாம் ஞாபகம் வச்சுருக்கயே நன்றின்னு எழுதியிருந்தான்.

நினைவுகள் புரண்டாடும் வயதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Viejos recuerdos!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 9

நேற்று ஸ்பானிஷ் கிளாஸ்ல ஒரு பிரசண்டேஷன் கொடுக்கனும். இதற்கு முந்தின வாரமே புரபசர் சொன்னாங்க, கூகிளாண்டவர் கிட்ட வரம் வாங்கிட்டு வராம சொந்தமாக எழுதிகிட்டு வந்து ப்ரசண்ட் பண்ணுன்னாங்க.

நானும் அதை உண்மைன்னு நம்பி சொந்தமாக எழுதிகிட்டுப் போய் செம சுமாராப் போனதால, ஏகப்பட்ட கதை வசனம் பாட்டு கேட்க வேண்டியதாகப் போச்சு. மத்தவங்கெல்லாம் கூகுளாண்டவர் உதவியில வெளுத்துக் கட்டிட்டாங்க.

வகுப்பு முடியிற நேரத்துல ஸ்பானிஷ் 3 அடுத்த மாசம் துவங்குதுன்னாங்க. நான் ஒரு ப்ரேக் எடுத்து ரிவைஸ் பண்ணிகிட்டு வர்றேன்னு சொன்னா, ஒட்டு மொத்தக் கிளாஸும் ஏகக்குரலில் உன்ர ரிக்வஸ்ட்டை வீட்டோ பண்றோம், ஒழுங்கா வந்து சேருன்னு ஏகோபித்த குரலில்.

நான் சொன்னேன், அவங்களைப் பாருங்க நாம ஸ்பானிஷ் 2ல உட்கார்ந்து கிட்டு இருக்கோம், அவங்க ஸ்பானிஷ் 5 லெவல்ல பேசிகிட்டு இருக்காங்கன்னா, கிளாஸே சிரிக்குது.

இப்பவெல்லாம் நான் கிளாஸ்ல ஏதோ சொன்னா கிளாஸே சிரிக்குது.

நேற்றைய கிளாஸில் ஸ்பானிஷில் 4 கேள்வி, எல்லாம் ஒரே கேள்விகள், கேட்கனும், மத்தவங்க பதில் சொல்லனும்.

புரபசர் ஆரம்பிக்கும் போது என்னை இப்பவெல்லாம் முதலில் களத்துல இறக்கி விட்டுடறாங்க. அவங்க என்னைக் கேப்பாங்க, அடுத்து நான் இன்னொரு கிளாஸ்மேட்டை ஸ்பானிஷ்ல கேட்கனும். அவங்க பதில் சொல்லனும்ன்னு.

முதல் கேள்வி: எந்த கடையில போய் துணி வாங்குவ? Bargain பண்ணுவையான்னு?

நான் இந்தக் கேள்வியைக் கேட்டப்ப, கிளாஸ்மேட் அவங்கப் போறக் கடையைச் சொன்னாங்க. யப்பான்னேன், எல்லோரும் சிரிக்கறாங்க.

Bargain பண்ணுவயான்னு கேட்டா, நல்லா பண்ணுவேன்னாங்க. என்ன கதையடிக்கிற அந்த கடையில வேலைக்காவாது, நீ ரொம்பவே ரீல் விடறன்னா, கிளாஸே சிரிப்புல அதிருது.

கடைசியல புரபசர், இவனை இரண்டு நிமிசத்துல நாலு கேள்வியைக் கேட்டு முடிப்பான்னு பார்த்தா 5 நிமிஷத்துக்கு இழுத்தடிக்கிறானேங்கிறாங்க. நம்ம ஓட்ட வாய் எங்கப் போனாலும் சும்மா இருக்க மாட்டேங்குது.

ஸ்பானிஷ் 1ல சேரும் போது 20 பேர் இருந்தோம். முடிக்கும் போது 13 பேர் தானிருந்தோம். ஸ்பானிஷ் 2 துவங்கிய போது 14 பேர் துவங்கினோம் இப்ப எட்டு பேரோட நிக்குது. 

நான் ஸ்பானிஷ் 2 லெசன் 3 அண்ட் 4ஐயே மூனு நாலு தடவை திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன். மனசுல நிக்க மாட்டேங்குது. ஒவ்வொரு லெசன்லையும் 70-80 புதுப்புது வார்த்தைகள். இப்ப கடைசி லெசன் 6 ஓடுது. நான் இன்னும் 3,4,5ஐயே திருப்பித் திருப்பி படிச்சு கிட்டு இருக்கேன். 

ஒரு ப்ரேக் எடுத்தா நல்லாயிருக்கும். புரபசர் என்னமோ, நீ ஆரம்பத்துல எப்படியிருந்த இப்ப எவ்வளவு கத்துகிட்டு இருக்க, ஸ்பானிஷ் 3க்கு நீங்க எல்லோருமே ரெடி, வந்து சேருங்கன்னு ஒட்டு மொத்த கிளாஸும் சொல்லுது.

மேலும் இந்த புரபசர் இங்க ஊர்ல உள்ள ஒரு சர்ச்சில் வாரா வாரம், ஸ்பானிஷ் மட்டுமே தெரிந்துள்ள சின்னப் பசங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றாங்க. நீங்கெல்லாம் அங்க வாலண்டியரா வாங்க, வாரத்தில் ஒரு நாள் நீங்க அவங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தாங்க, அவங்க ஸ்பானிஷ் மட்டுமே பேசறதை வச்சு நீங்க ஸ்பானிஷ் கத்துக்கலாம். உங்களுக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லதுன்னாங்க.

புரபசர் சொல்லி முடிக்கிறதுக்குள்ளயே அம்புட்டு பேரும் கையைத் தூக்கிட்டோம். அதுவும் அடுத்த மாசம் சர்ச்சுல துவங்குது.

என்ர அம்மிணி கிட்ட இன்னும் ஒன்னும் சொல்லலை. வீட்டுல ஒரு வேலை நடக்க மாட்டேங்குது, நீ பாட்டுக்க இப்படி சுத்தறயேம்பாங்க. அம்மிணி கிட்ட வீணை கத்துக்க புதுசா 3 பேர் வந்துருக்காங்க. 

அம்மிணியோட பழைய ஸ்டூடண்ட் கிட்ட நாலு வருஷம் முன்ன, அந்தப் பொண்ணு எட்டாவது படிக்கும் போது சொன்னேன். நல்லா தினமும் பிராக்டீஸ் பண்ணு, என்ர அம்மிணி போல பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்கு வீணை வாசிக்கலாம்ன்னு. அந்த பொண்ணு இப்ப ஏகாந்த சேவைக்கு தானும் வாசிக்கனும்ன்னு அம்மிணியோட தனி ப்ராக்டீஸ் ஆரம்பிச்சுருக்கு. போன மாத ஏகாந்த சேவைக்கு அம்மிணி கூட கோவிலில் வாசிச்சுது அந்த பொண்ணு. நமக்குத் தெரிஞ்சது எடுபுடி வேலை மட்டுமே. இரண்டு வீணையையும் ஒரே ஸ்பீக்கர்ல கனெக்ட் பண்ணி விட்டு நிம்மதியாக வாசிச்சாங்க.

அம்மிணியும் busy நானும் busy . 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprendo a hablar en español!