Sunday, September 25, 2022

நண்பனின் தந்தையிடமிருந்து

கல்லூரி நண்பனின் அப்பாவின் தினசரி முத்துக்களில் ஒன்று:

சிந்தனைத் துளிகள் 

1) Never assume that loud is strong and quiet is weak!

2) "சந்தோஷம்" என்பதை எங்கும் வாங்க இயலாது.
அது நல்லதோர் வாழ்க்கை எனும் முதலீடு ஈட்டிய வட்டி!

3) அர்த்தமற்ற வார்த்தைகளை அறிவற்ற மனிதர்  நடுவே உதிர்ப்பதைக் காட்டிலும், அர்த்தமுடன்  அமைதி காத்தல் நலம்!

4) இன்றைய கவலைகள் இன்றைய முயற்சிக்கு முட்டுக்கட்டை மட்டுமல்ல! நாளைய மகிழ்ச்சிக்கும் தடை ஆகிறது!

5) நமது எண்ணங்களும் உணர்வுகளும் சொற்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ளவரை மகிழ்விக்கும் எனில் நாம் தனியே இன்பத்தை தேடி எங்கும் பயணிக்க தேவை இல்லை!

நீதி

மனம் ஒரு ஆலயம்! அதில் கருணை எனும் இறைவன் அருளாசி புரிதல் வேண்டும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

கனிவுடன் இனிய காலை வணக்கம் 
மாதவன் 

———-
படித்ததில் பிடித்தது.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Vive tu vida en tu camino!

வெட்டிப் பொழுது

நமக்குத் தான் யார் கேட்கலைன்னாலும் ஃப்ரீ அட்வைஸ் தர்ற பழக்கம் உண்டே. ஆதலால் யாராவது எனக்கு நேரமேயில்லைன்னு கதை விட்டாங்கன்னா எனது மூன்றாவது கண் திறந்துரும். சும்மா நமக்குத் தெரிஞ்ச டைம் மேனேஜ்மண்ட் பத்தி அடிச்சிவுட்டு விடுவது தான், பிறகு நம்மப் பக்கமே வரமாட்டாங்க.

ஆனால் இன்னிக்கு என்ர நிலமை அப்படி. ஏகப்பட்ட வேலை ஒன்னு மாத்தி ஒன்னு, நேரமில்லை. நெற்றிக்கண் தானாகத் திறந்துகிச்சு.

என்னைப் பார்க்க வர்றேன்னு சொல்றவங்க வரமாட்டாங்க. ஆனால் அவங்க வந்தாங்கன்னா என்ன செய்யன்னு நானும் அம்மிணியும் ஆயிரத்தெட்டு பிளான் போட்டு மாத்துவோம். கடைசியல ஒன்னும் பண்ணாம நேரமேயில்லைன்னு இரண்டு பேரும் அலுத்துக்குவோம். ஒருத்தரை ஒருத்தர் நீ வெட்டியாக இருக்கேன்னு சொல்லிரக்கூடாதல்ல.

நேற்று மாலை ஐந்தரை மணிக்கு ஒருத்தர் வர்றேன்னார், அவர் வந்தா டின்னருக்கு வெளியப் போலாமேன்னு நினைச்சேன். ஆனால் மாலை வரலை, காலையில் வர்றேன்னார். சரி், பிளான் மாத்தியாச்சு.

வெள்ளிக்கிழமை இரவு பண்ற ஸ்பானிஷ் ஹோம் வொர்க் பண்ணலை. சரி இன்று சனிக்கிழமை காலையில பண்ணலாம்ன்னு விட்டேன். இப்ப அவர் மறுபடியும் மாலை வரப்போறேங்கிறார். 

இரவு பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்குப் போகனும். அம்மிணியும் ஸ்டூடண்டும் பெருமாளுக்குத் தாலாட்டு வாசிக்கனும்.

முக்கியமான இந்தியக் கடமையைச் செய்யனும் அங்க என்ர ஃபோன் ரிப்பேர். கடமையைச் செய்திருக்கேன் ஃபோனில்லாம.

அடுத்து ஸ்பானிஷ் ஹோம்வொர்க் எடுத்தா அரண்டு போயிட்டேன். எல்லாம் ஸ்பானிஷ் விளம்பரம் மற்றும் சூப்பர்மார்க்கெட் வீடியோ போட்டு விட்டு அதிலிருந்து எல்லா கேள்விகளும் ஸ்பானிஷ்ல. இப்ப ஸ்பானிஷ் படிச்சா கொஞ்சம் நெப்புகுத்தாப் புரியரதால, அத்தனை கேள்விகளுக்கு ஸ்பானிஷ்லேயே பதிலளிச்சாச்சு.

அடுத்து மதியம் ஒரு வேலை இருக்கு, சாயந்தரம் அவர் வந்தா (வருவாராத் தெரியலை) கொஞ்ச நேரம். 

இரவு பெருமாள்ட்ட சரணாகதி.

அம்மிணி வேற நீ எப்பப் பார்த்தாலும் இந்த ஃபோன்லயே பொழுத ஓட்டறேங்கிறாப்புல. நேரம் பத்தவில்லை பெருமாளே!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Gestiona tu tiempo con prudencia!

எலி வலையில் சிக்கிய பொழுது

எலி வலைகளுக்குள் வலிய புகுந்த வச்சுடறாங்க! ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்னுலையும் இழப்புகள் அதிகமாகவே ஆகிகிட்டு இருக்கு. எதுவுமே செய்ய முடிவதில்லை. இழந்தவை மிக அதிகம். இயல்பாக நடக்கிறது இப்ப.

இழப்புகளை இப்பவெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிடுச்சு இப்ப. 

என் உறவினர்களுக்குச் சொல்வேன் எப்போதும் குறைகளைப் பட்டியலிடாதே, அதுவே, அந்த லிஸ்டே நமக்கு பாரமாக வந்து நிற்குமென. 

கஷ்டங்களைக் கடந்து விடலாம். ஆனால் கஷ்டங்களின் பட்டியல் தான் மனதில் பாரமாய் நிற்கும்.

எவ்வாறு களைவது இதை!

கவலைகளுக்கு நம்மைப் பிடிப்பதால் அவை நம் அருகில் வருகிறதென அறிக.

வருவதை ஏற்றுக் கொள். வலை விரித்தாலும் புகுந்து கொள், அதில் நடக்கப் பழகிக்கொள்.

மனதில் சுமையா, கவலைப் படாதே, சுமையை இறக்க பல நடைபாதைகள் கிடைக்கும். அதில் நம் நகைச்சுவையின் நகைப்பில் பாரத்தை இறக்கி விடு.

பெருமாள் கோவில் தட்டில் போடும் அந்த ஐந்து பைசாவில் உன் கவலையைக் கரைத்து விடு.

கவலைகளைக் களைய உலா புறப்பட்ட ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय।
¡No te preocupes en tu sonrisa!

பின் குறிப்பு: சும்மா எழுதத் தோன்றியது.

சுதந்திரமாய் பேச முடியலையே

அக்னிபத் ன்னு ஒருத்தர் போஸ்ட்ல கமெண்ட் போட்டேன், அம்புட்டு தான். அக்னி பொசுக்கிடுச்சு. இனி உனக்கு கமெண்ட் போட உன்னை விட மாட்டேன்னு தூக்கிட்டாப்புல.

கேஸ் விலை ஏறிப் போச்சுன்னு புலம்பினாங்க. சரி எலக்ட்ரிக் ஸ்டவ் உபயோகிக்கறேன்னு சொன்னேன். இப்ப அதோட விலை ஏறிப்போச்சு. அடுத்து மண்ணெண்ணெய் கெரசின் கரி அடுப்புக்கு எப்ப விலை ஏறுமோ தெரியலை. அதுக்குள்ள அங்குட்டும் கமெண்ட் போட ஃப்யூஸ் போயிடும்.

அரிசிக்கு வரின்னாங்க, நம்ம தொப்பை சைஸ் பார்த்து வரி வருமான்னேன். அவர் கறிக்கடை ரேட்டு கூட அத்துப்புடியா இருக்கார். இப்ப என்ர கமெண்ட்டுக்கு என்ன ரேட் வைப்பாரோ தெரியலை.

ஒருத்தர் இன்சூரன்ஸ் எடுக்கலைன்னா வரி போட்டுருவார் போலயிருக்கு. மனுசன் படிச்சு படிச்சு சொல்றாப்புல. ஆனால் உங்களுக்கு ஃபைன் போட்டாத் தான் சரி வருவீங்கன்னு இன்னும் சொல்லாத குறை தான். என்ர கமெண்ட்ஸ்க்கெல்லாம் ஒரு லயபிலிட்டி இன்சூரன்ஸ் வாங்கி வச்சுக்கனும் போல.

எங்கூர்ல பெட்ரோல் டீசல் வண்டிக்கு மட்டுமல்ல, நீ எலக்ட்ரிக் வண்டி ரோட்டுல ஓட்டுனா கூட வரி போடப்போறோம். அடுத்த நாம ரோட்டுல நடக்கிறதுக்குக் கூட வரி கட்ட வேண்டி வரும்.

இதெல்லாம் சொன்னா, சொன்ன அடுத்த பத்து நிமிசத்துல என்ர போஸ்ட்டையே உள் டப்பியில பொசுக்க வேண்டி வருதே!

நமக்கெல்லாம் எப்பயா சுதந்திரம் வரப்போவுது!

வாய் நீளம். குறைக்க முடியல, குரைக்கரோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mantente fresco!

வீட்டில் கிடைக்கும் பல்புகள்

இதுவரை இங்கு இன்று வாங்கிய பல்ப் கோட்டா இரண்டு.

அம்மிணியைப் பார்க்க அவங்க நண்பி வந்திருக்காங்க, அவங்க முன்பு வீணை ஸ்டூடண்ட்.

சரி இரண்டு பேரும் வீணை வாசிப்பாங்கன்னு பார்த்தா, இரண்டு பேரும் அரட்டை, ஊர் வம்பு வேற பேசி கிட்டு இருக்காங்க.

இரண்டு பேர்ட்டையும் ஊர் வம்பு பேசறதை விட்டுவிட்டு வீணை வாசிக்கிறதைப் பாருங்கன்னா, வந்தவங்க உள்ளேர்ந்து குரல் கொடுக்கறாங்க: நான் வீணை வாசிக்க வரலை, இவ அம்மாகிட்ட கத்துக்கறேன், இப்ப ஊர் வம்பு பேச வந்தேன்னு உள்ளேர்ந்து திருப்பி குரல் கொடுக்கறாங்க.

ஸ்பானிஷ் படிச்சு கிட்டு இருக்கிறேன். ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்கேன்.  நடுவுல இங்க வந்தா ஒரு பல்ப். வீட்டுக்குள்ள ஒரு பல்ப்.

இன்னிக்கு எங்கப் போனாலும் பல்ப் பிரகாசமாக எரியுது.

ராசிபலன் இயல்பாக வேலை செய்கிறது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Concentrarse y estudiar!

அரசு அலுவலர்களை அவமதித்தல்

பதிவிலிருந்ஒது த்த வரியை எடுத்துகிட்டுப் போய் அதைத் தான் எப்போதும் எதையாவது உருட்டுவது போல உருட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளதைப் பார்த்தேன். இணையத்துல எதை வேணா வெட்டி ஒட்டிக்கலாமில்ல. பதிவோட முழு content அவர்களுக்குப் ஒரு பொருட்டல்ல. தான் உருட்டுவதற்கு ரோடு போட ஏதோ கிடைச்சாப் போதும் இவர்களுக்கு.

அரசு அலுவலங்களில் விபூதி சந்தனப் பொட்டு இயற்கையாகவே பல காலகாலமாக இருக்கு. அதை வெறும் ஒரு மதத்தோட ஒப்பிட்டு அதன் சின்னம்ன்னு அரசு அலுவலகத்தில் ஏனிருக்கனும்ன்னு நேரிடையாக கேள்வி கேட்க யாவருக்கும் உரிமையிருக்கு. ஆனால் அந்த அலுவலகத்திலிருப்பவர் அனைவரும் நாத்திகர்கள், லஞ்ச லாவண்யத்தில் திளைப்பவர்கள் என்று முத்திரை குத்துவது அனைத்து அரசு அலுவலர்களையும் கேவலப்படுத்தும் ஒரு செயலல்லவா.

லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், அந்த அலுவலகத்திலிருக்கும் அனைவரும் நாத்திகர்களென்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றமல்லவா. ஒரு அரசு அலுவலகத்தில் 500 பேர் தன்னோட அப்ளிகேஷன் கொடுத்து இருக்கிறார்களென்றால், அவர்கள் வரிசைப்படி பிராஸஸ் செய்ய விடாமல் ஒரு புரோக்கர் புடிச்சு அரசு அலுவலருக்கு சட்டத்துக்கு மீறி பணம் கொடுத்து இவர்கள் அப்ளிகேஷனை முன் கூட்டியே பிராஸாஸ் செய்ய வைப்பவர்கள் சட்டத்துக்கு முன் குற்றவாளியில்லையா, இவர்கள் செய்வது அறம் சார்ந்த செயலா? 

அரசு அலுவலகங்களை தனது சுயநலத்துக்கா தன் வேலை முன் கூட்டியே நடத்திக் கொள்வதற்காக ஒரு புரையோடிய அலுவலகமா மாற்றிய பங்கு அனைவருக்கும் உண்டு. அனைவரும் குற்றவாளிகளே, நாத்திகர்களே உங்கள் கூற்றுப்படி. அறம் படி.

ஒரு கமெண்டில் சொல்வதை எடுத்துக் கொண்டு போய், அதில் ஒரு ப்யூன் கூட அரசு அலுவலகத்தில் பொது மக்களைக் கேவலமாக நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் அவர் சொல்ல வருவது: மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அதே மனுவை வைத்து தலையில் அடித்தது தவறல்ல, இவரது பார்வையில் அது ஒரு செல்லத் தட்டு தானோ. தர்மபுரி எம்பி பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பொதுப்பணித்துறை அதிகாரியை மரியாதையற்ற முறையில் நடத்தியது சரி தானோ.

ப்யூன் கதைக்கு முதலில் வருவோம். நம்மூர் கோர்ட்டில் நீதிபதி வந்து தன் சீட்டில் அமர்ந்து அன்றைய வழக்குக் கட்டுகளைப் பார்க்க உட்காரும் முன் அந்த நீதிபதி அருகில் நிற்கும் அந்த நீதிபதியின் உதவியாளருக்குப் பணத்தைக் கொடுத்து, தன்னோட வழக்கு சீக்கிரம் முன் கூட்டியே வருவதற்கு, தன்னோட வழக்குக்கட்டு அந்த அடுக்கில் மேலெழுந்து வருவதற்கு அந்த உதவியாளர்களுக்கு பணம் கொடுப்பது யாரென்று பாருங்கள். நீதித்துறையையே இப்படி மாற்றி செயல்பட வைக்கும் ஊரில் மிகச் சாதாரணமான ஒரு அரசு அலுவலகத்தைக் குறிப்பிடுகறீர்கள்.

ஒரு ப்யூனுக்கு இவ்வளவு அளவுக்கு அவரை எதேச்சதிகாரமாக செயல்பட வைக்க வைத்தது யாரு. உங்கள் காரியம் நடக்க நீங்கள் கொடுக்கும் லஞ்சப் பணமில்லையா? இங்கு குற்றவாளி யாரு? அரசு அலுவலகர் மட்டுமா?

ஒரு ஜனநாயகத்தின் முக்கியமான மூன்று ஆணிவேர்களில் ஒன்று நீதித்துறை. அதை ஒழுங்கு முறையாக செயல்பட வைக்கும் போது தான் நமது ஜனநாயகம் தழைக்க முடியும்.

அடுத்து எம்பியின் செயலுக்கு வருவோம். அன்று நடந்த செயல் உண்மையில் கண்டிக்கதக்கது, முறையற்றது. பாராளுமன்ற சபாநாயகரிடம் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டிய குற்றமது. 

இந்தியாவில் காலகாலமாக அடிக்கல் நாட்டு விழா நடப்பது தான். அதை பூமி பூஜையாக நடத்த விரும்புவர்கள் புரோகிதரை வைத்தோ, அல்லது கோழி அறுத்து பலி கொடுத்தோ, வசதியுள்ளவர்கள் ஆடு அறுத்து துவங்குவதோ, அல்லது இன்னும் பலவகையாக காலம்காலமாக நடப்பது. இப்போது கிறித்துவப் பாதிரியார்கள் கூட இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர். இத்தகைய பூமி பூஜைகள், அடிக்கல் நாட்டு விழாக்கள் மதம் சார்ந்தது மற்றுமல்ல, மக்களின் அந்தந்த ஊர் வழக்கப்படி நடக்கும் கலாச்சார பண்பாடு சம்பந்தப்பட்டது கூட. 

அந்த எம்பி அவமதித்தது ஒரு அரசுப்பணியாளரை மட்டுமல்ல, பொதுமக்களோட கலாச்சார பண்பாட்டு வழக்கத்தையும். அந்த எம் பி கேட்ட மாதிரி அவருக்கு ஒரு புரோகிதர் வைத்து நடத்துவது பிடிக்கவில்லையென்றால் அவருக்கு எது பிடிக்குமோ அதை முன் கூட்டியே தெரிவித்திருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருபவர்க்கு இதெல்லாம் முன்பே தெரியாது என்று சொல்வதெல்லாம் நம்பத் தகுந்ததல்ல. திட்டமிட்ட ஒரு அவமதிப்பு அரங்கேற்ற நாடகம். கண்டிக்கத்தக்கது.

பதிவு ரொம்ப பெருசாயிடுச்சு. அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

நாடகமேடையில் நானும் ஒரு கதாபாத்திரம் என்பதில் 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Drama escénico!

தடி எடுத்தவனெல்லாம்

அரசு, அரசமைப்பு, அதிகாரம், நீதி, சட்டம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு அதிகாரம் செல்வாக்கு உள்ளது என்கிற check and balance தெரிந்து செயல்படுவது மிகவும் நல்லது.

தடியெடுத்தவன் தண்டக்காரன், சத்தம் போட்டு மிரட்டுபவர் சட்டாம்பிள்ளை கதை தான் எல்லா இடங்களிலும்.

ஒருவர் தன் பதவியின் அளவுக்கு மீறி மற்றவர்களை மிரட்டுவது, கையை நீட்டுவது, அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றும் செய்ய முடியாமல் அடங்கிப் போவது, நடந்த நிகழ்வு தேவையா தேவையற்றதா, பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதா வேண்டாமா எனப் பரிசீலித்து செயல்படுவதா வேண்டாமா என நடக்கும் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் உண்டு, இங்கும் உண்டு.

என்ன, இங்கைக்கும் அங்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு நடைமுறை பழக்கவழக்கங்களை இயல்பாகக் கடைபிடித்தோமென்று சொல்லி விட்டு எளிதாகக் கடந்து போக முடியும். எவரும் மற்றவர் மீது கை நீட்ட அல்லது மிரட்ட முடியாது. திரைமறைவு செயல்களில் விளைவுகள் தெரியவரும்.

பதவியில் ஏறிய பிறகும் சக மனிதனை மனிதனாக நடத்தும் போது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Respetar a los demás!