Friday, October 28, 2022

கோவில் கோபுரம்

பெருமாள் கோவில் கோபுரம் முழுமையடைந்து விட்டது. போன மாதமே கும்பபூஜை முடிவடைந்தது.

இன்று காலை கோவில் போன போது பெயிண்டிங் வேலை நடந்துகிட்டிருந்தது. எதிர்வீட்டு நண்பர் போன் செய்து, தெரியமா, தீபாவளி அன்னிக்கு கவர்னரையும் வரவழைத்து பூரணகும்ப மரியாதையுடன் கோபுர வாசல் திறக்கப் போறாங்கன்னார். அப்ப தான் கவனிச்சேன். இறுதி கட்ட வேலை நடந்து கொண்டிருந்தது.

மாலையில் அம்மிணி இன்று சிவன் கோவிலில் இரவு நேர நீராஜனத்திற்கு கோவிலில் வீணை வாசிக்கனும்ன்னு சொல்ல, போய் சிவன் கோவிலில் அம்மிணி வாசிக்க எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு பெருமாள் கோவில் பக்கம் வந்தால் நிலவில் கோபுரம் பிரம்மாண்டமாக நிற்குது.

கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்டாம்பாங்க அம்மா!

இன்று மதியம் சிவன் கோவில் உண்டகட்டி வெண்பொங்கல். வாவ் என்ன ஒரு நெய் மணக்க ஒரு டேஸ்ட்.  3 தொன்னை வாங்கி சாப்பிட்டதில் மதியம் லன்ச் ஆச்சு.

இரவில் பெருமாள் கோவில் புளியோதரை. வாவ். பிரமாதம். இரண்டு தொன்னை வாங்கி காரில் வச்சேன். புளியோதரையை சிலர் டப்பா டப்பாவாக அள்ளிக் கொடுப்பதைப் பார்த்தேன். டப்பா கேட்கத் தயக்கம். இரண்டாவது தொன்னை சங்கடத்தோடு கேட்டு வாங்கி வந்தேன். அவங்க மலர்ந்த முகத்தோடு நல்லெண்ணத்தில் கொடுத்தாங்க.

எதிர்த்த வீட்டுக்காரங்களும் கோவில் வந்திருந்தார்கள். இன்னிக்கு அவங்க அங்கு ஏகாந்தசேவைக்கு வீணை வாசிச்சாங்க. அவங்க வரும் போது புளியோதரை தீர்ந்திருக்கும்ன்னு தெரியும்.

திரும்பி இரவில் வரும் போது அவருக்கு போன் பண்ணி புளியோதரை கிடைச்சுதான்னு கேட்டேன். வருத்ததோடு ஒன்னுமே கிடைக்கலை, பெருமாள்க்கு வைக்கிற பால் கூட கிடைக்கலைன்னார். 

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு புளியோதரை தொன்னையை அவருக்கு கொடுக்க, பெருமாள் கோவில் பிரசாதம் கொடுத்து வச்சுருக்கனும்ன்னு வாங்கிட்டுப் போனார். அவர் வைஷ்ணவர், அவருக்கு அது விசேஷம். என்ன ஒரு சுவை அந்த புளியோதரை! வாவ். நானும் அம்மிணியும் ஒரு பருக்கையைக் கூட விடாம வழிச்சு தின்னோம்.

இன்றைய பொழுது அதுவாய்க் கழிந்தது.

வாழ்வினிது.
ओलै सिरिय।
¡La paz en mente está en la devoción!

No comments: