Friday, October 28, 2022

நவராத்திரி 2022

நவராத்திரி இங்கு சில பேருக்கு ஒரு passion . ஒரு மாதம் மேலே பிளான் பண்ணி அதற்குத் தகுந்த மாதிரி வீட்டையை மாற்றி அமைப்பது மட்டுமல்ல, கொலுவில் வைத்துள்ள ஒவ்வொரு பொம்மைகளுக்கும் ஒரு தீம் வைத்து அதற்கு கதையே ஒன்றரை மணி அளவுக்கு விவரிக்கும் அளவுக்கு வீடியோ எடுத்து பகிர்வது என்கிற அளவுக்கு ஈடுபாடோடு செய்வார்கள்.

பையனோட கிளாஸ்மேட்டின் அம்மாவின் கைவண்ணம் இந்த கொலு. இதற்கு ஒன்றரை மணிநேர விவரிப்புடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

நவராத்திரி சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு வரமுடியாதவர்களை இன்று அழைத்திருந்தார்கள். அம்மிணி ஒரு வாரமாக, அவங்ககிட்டேர்ந்து அழைப்பு வந்திருக்குப் போயேயாவனும்ன்னு ஒரு வாரமாக நினைவூட்டல். அப்படி என்னதானிருக்கும்ன்னு இன்று போய் பார்த்ததில் வியந்தவையே கீழேயுள்ள படங்கள்.

பத்து வருடம் முன் ஒரு சின்ன தவறு செய்தேன். ஒரு நண்பர் வீட்டில் கொலுவுக்கு அழைக்க, அவர்கள் வீட்டிலுள்ள கூட்டத்தைப் பார்த்து அம்மிணியை மட்டும் வீட்டினுள் அனுப்பி விட்டு நான் காரிலேயே இருந்து விட்டேன். அவர்களும் இரண்டு அறைகள் முழுக்க கொலு பொம்மைகள் வைப்பது மட்டுமல்ல, அவர்களது உணவுக்கு நான் அடிமை. எங்க பாட்டியின் சமையலின் சுவை இவரது சமையலில் இருக்கும். உள்ளே போன அம்மிணி நான் உள்ளே வராததைப் போட்டுக் கொடுக்க, அவர்கள் என்னிடம் வன்மையாக கடிந்து கொண்டது மட்டுமல்ல, பத்து வருடமாக கொலுவுக்கே கூப்பிடறதில்லை இப்ப.

அம்மிணிக்கு அது மாதிரி ஆயிடக்கூடாதுன்னு இழுத்துகிட்டுப் போனாப்புல. போன இடத்தில் பிரமாதமாக இருந்தது.

அதை உங்களுடன் பகிர்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Son divinos!

No comments: