Friday, October 28, 2022

எனை அறிய முடியாப் பொழுதில்

கடந்த சில நாட்களாகவே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது.

பல நண்பர்கள் பல வருடங்கள் கழித்து இப்போது ஒரு வாரமாக ஃபோனில் பேசுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் இப்ப வளர்ந்து கல்லூரியில், சிலர் படிப்பு முடித்தும் விட்டனர். அந்தக் குழந்தைகள் என்னை நினைவு கூர்வதாகச் சொல்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் பிஞ்சுகள், எப்படி ஞாபகமிருக்கும்ன்னு தெரியலை.

பணம் நிறையவே சம்பாதித்து விட்டோம், ஆனால் அதை விட இந்த ஓரிரு நிமிட போன் உரையாடலே மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

அவர்களது கடின காலங்களில் சொன்ன அறிவுரைகளை ஏற்கத் தவறியவர்கள் இதில் சிலர். இன்று அதை போனில் நினைவு கூர்கிறார்கள். எவரது தவறுகளையும் நேரடியாக அவர்களிடம் எடுத்துச் சொல்லி செய்யாதேன்னு சொன்னதை இப்ப சொல்கிறார்கள். காலம் தாழ்ந்து என்ன செய்ய.

பழைய தொடர்புகள் தானாகத் துளிர்கின்றன.

எனையே அறியமுடியா ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय!
¡Viejos amigos en llamadas telefónicas ahora!

No comments: