Friday, October 28, 2022

தப்புத்தாளங்கள்

மிகப் பிரபலமானவர்கள் கச்சேரிக்கு நல்ல கூட்டம் வரும். கூட்டத்தில் சிலருக்கு சங்கீதம் தெரியும்.

பிரபலமானவர்கள் ராகம் ஆரம்பிக்கும் போதே அம்மிணியும் அவர்களோட நண்பர்களும் இது என்ன பாட்டுன்னு ஒரு guessing game ஆரம்பிச்சு, ஒரு தனி chat session அல்லது காதுல கிசுகிசு மந்திரம் ஓடிகிட்டு இருக்கும்.

அடுத்து பாடகர் பாட்டை ஆரம்பிச்சவுடனேயே சங்கீதம் தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் தொடையைத் தட்டி தாளம் போட ஆரம்பிச்சுருவாங்க.

நாம ஞானசூன்யம். பாட்டும் தெரியாது ராகமும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் எடுபுடி வேலை தான், மற்றபடி பாட்டையும் எந்த ம்யூசிக் கச்சேரியையும் ரசிக்கத் தான் தெரியும்.

யாரோ என்ன ராகம்ன்னு கேட்டுரப் போறாங்கன்னு பயத்துல உட்கார்ந்திருப்பேன். இப்பவெல்லாம் அம்மிணி அவங்க நண்பர்களைக் கழட்டிவிட்டுட்டு என் பக்கத்தில் உட்காருவதால் அந்தப் பிரச்சனையில்லை, அம்மிணிக்குத் தெரியும். நமக்கு நிம்மதி. தப்பிச்சுருவேன். 

ஆதலால் ரொம்பவும் தலையாட்ட பயம். கச்சேரிகளில் தலையாட்டற கோஷ்டி ஜாஸ்தி.

நேற்று என் பின்னாடி உட்கார்ந்திருந்தவர் கானடாக்கு போடற தாளம், பாடறவர் பாட்டைக் கேட்க முடியாம அவரோடத் தொடையைத் தட்டற சத்தம் பாட்டைக் கேட்க முடியாம ரொம்பத் தொல்லை பண்ண ஆரம்பிச்சுருச்சு.

ரொம்பத் தெரிந்தவராதலால் நான் அவர் தொடையைத் தட்டி அய்யா நிப்பாட்டுங்கன்னு கேட்டுக்க வேண்டியதாப் போச்சு. அவருக்கும் எம்பராஸிங் தான். என்னைச் சுத்தியும் அம்மிணியின் நண்பிகள். எல்லோரும் என்னைப் பார்க்க, அமைதியாக அவங்கப்பக்கமே திரும்பலை நான்.

சபை தட்டுற தப்புத் தாளங்களைக் கண்டுக்காம வாசிக்கற பக்கவாத்யங்கள் ஏன் சபையைப் பார்க்காம பாடறவரைப் பார்த்து வாசிக்கிறாங்கன்னு புரியுது.

நான் தப்பித் தவறி கூட என் நாலு விரலை என் தொடையில தட்டிற மாட்டேன். அம்மிணி கண்டுபுடிச்சுருவாப்புல.

அமைதியா எடுபுடியாக இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escucha música en silencio!

No comments: