Friday, October 28, 2022

மொழியும் வேலைவாய்ப்பும்

1987 - தமிழகத்துல pgdca முடிச்சுட்டு வெறும் அதன் சர்ட்டிபிகேட் மட்டும் ஜூலை 6ந்தேதி வாங்கிகிட்டு ஜூலை ஏழாந்தேதி நானும் அம்மா அப்பாவும் சேலத்திலிருந்து அஸ்ஸாம் கிளம்பிப் போனோம். 

போய் ஒரே மாசத்துல வேலை கிடைச்சது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் இன்டர்வ்யூ பண்ணி ஒரு லோக்கல் இன்ஸ்ட்டிட்யூட்டில் வேலை கிடைச்சது. அரசு சம்பளம் 2200 ரூபாய். அப்ப ஹிந்தியும் தெரியாது அஸ்ஸாமியும் தெரியாது. தினம் தடுமாறுகிற நிலமை. அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஹிந்தி தடுமாறி கத்துக்க ஆரம்பிச்சேன். 

ஒரு வருடம் கழித்து ஸ்டேட் செகரட்டேரியட்ல வேலை வந்து அப்ளை பண்ணினேன். உடனே இன்டர்வ்யூவிற்கு கூப்பிட்டாங்க. கிடைச்சால் 3500 சம்பளம், நிறைய பெனிஃபிட்ஸ். 

போன இடத்துல இன்ட்ர்வ்யூ பண்ணின கமிஷனர் கேட்ட முதல் கேள்வி உனக்கு அஸ்ஸாமி பேச எழுதத் தெரியுமா, அரசு வேலையில் இது முக்கியம்ன்னார். இப்ப கொஞ்சம் புரியுது, இரண்டு மூனு மாசம் டைம் கொடுங்க கத்துகிட்டுப் பேசறேன்னேன். நீங்கெல்லாம் வந்து எங்க வேலையை எடுத்துகிட்டா இங்க லோக்கல் ஆளுக்கு எப்படி கிடைக்கும். நீ போலாம்ன்னு அனுப்பிட்டார். ஒரு அரசு கமிஷனர் இப்படி சொல்லலாமான்னு நினைச்சு வேதனையோடு வெளியே வந்தேன். வேலைக்கு முழு தகுதியிருந்தும் மொழி தெரியாததால் கிடைக்கலை.

இது இன்று ஞாபகம் வரக் காரணம்.

இரண்டு நாளா வாட்சப்புல வர்ற எல்லா தமிழ் பேப்பர்களையும் புரட்டிப் பார்த்ததில் சிலவற்றில் தலைப்புச் செய்திகள் 2023க்குள் மத்திய அரசு எல்லா காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும், கிட்டத்தட்ட பத்து லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படுமென்று பார்த்தேன்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 60-70 கோடி மக்கள் ஹிந்தி பேசத் தெரிந்தவங்க. மத்திய அரசு வேலையில் ஹிந்தி பிரதானமாக தெரியனும்ன்னு பார்த்தால் அந்த 10 லட்சம் காலியிடங்களில் கிட்டத்தட்ட more than two-third அல்லது அதற்கும் மேலே 80 சதவீத வேலை வாய்ப்பு ஹிந்தி பேச எழுதத் தெரிந்தவர்களுக்குப் போகலாம். 

கற்க வேண்டிய நேரத்தில் கற்காமல் என்னைப் போல் இழப்பவர்கள் எத்தனை பேரோ.

கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் ஹிந்தி பேசுபவர்கள். அவர்கள் வாழ்வாதாராம் உயர அவர்களுக்கான இஞ்சினியரிங், மருத்துவம், மற்றும் பல துறைகளின் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மொழி பெயர்க்கப்படும் போது அவர்களுது கல்வி கற்கும் வாய்ப்பு உயருவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்தால் வட இந்திய மக்களின் வளர்ச்சியை இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் நாம் கண்கூடாகப் பார்ப்போம்.

வேற்றுமையின்றி கல்வி கற்பதில் மொழி கற்பதில் பலனுண்டு.
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Aprende con respecto a todo!

No comments: