Saturday, July 8, 2023

தலைமையிடம் கேள்வி கேட்காதே

தலைமைப் பதவியில இருக்கிறவங்க கிட்ட நாம அவங்களை சேலஞ்ச் பண்ற மாதிரி ஏதோ ஒரு கேள்வி கேட்டுபுட்டோம்ன்னு வச்சுக்குங்க அம்புட்டு தான். ஒவ்வொரு சந்தர்ப்பம் வரும் போதும் நம்மளைப் பழி வாங்க தயங்கமாட்டாங்க! தங்களோட பவரை அங்க காண்பிப்பதாக காட்டிக்குவாங்க!

இது குறிப்பாக நம் மக்களிடம் அதிகம் பார்க்கலாம். சாதாரண ஒரு கமிட்டியில இருக்கிறவங்க கூட நேரம் பார்த்து தாக்குவதைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இவர்களெல்லாம் 20 வருடமாகத் தெரிந்தவர்கள், நண்பர்கள், பரஸ்பர உதவி செய்து கொள்பவர்கள். இருப்பினும் பதவின்னு வரும் போது, கேள்விகளை சில சமயம் ஏன் கேட்கிறோம்ன்னு ஆயிரும்!

என்ன அடி பலமான்னு கேட்கலாம்!

பழகிடுச்சு இப்ப!

சமீபத்தில் ஒரு இடத்தில் அம்மிணி முன் கூட்டியே அரங்கில் போய் உட்கார்ந்த போது ஏற்கனவே உள்ளே இருபது பேர் இருந்தனர். அம்மிணிக்கு  காலில் பிரச்சனை, ஆதலால் நிற்க முடியாமல் உள்ளே போனாங்க! வேலைக்காவல. எல்லோரையும் வெளியே அனுப்பிட்டாங்க!  கூப்பிடும் போது உள்ளே வா! அனுப்பியது ரொம்பத் தெரிஞ்சவங்க!

இதற்கு முன் ஒரு ப்ரோக்ராம் ஒன்றில் உள்ளூர் பெரிய மனிதர் ஒருவர் போர்ட் மெம்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அவ்வளவு தான். அதை புறக்கணிக்கிற நிலமை தான்!

போனோமா கேட்டோமா அங்ஙன கலந்துகிட்டோமா அவ்வளவு தான், பேசாம வந்துரனும்!

கேள்வி மட்டும் கேட்டுரக் கூடாது!

உனக்கெல்லாம் எதுக்குயா இந்த ஓட்ட வாய்ன்னு கேப்பீங்க! அது நம்ம வாய்க்குத் தெரிய மாட்டேங்குதே!

அமைதியாய் இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La democracia está en papel!
ஜூன் 5 2023

No comments: