Saturday, July 8, 2023

கிராம வாழ்க்கையை இழந்த பொழுதில்

எனது சித்தப்பா என் மேல் அதிகம் பாசம் காட்டியவர். சின்ன வயதில் எனக்கு ஜுரம்
 மற்றும் எந்த வியாதி வந்தாலும் வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்வார். தடவிக் கொடுப்பார். கால் பிடித்து விடுவார்.

தனது அறுபது வயதிலேயே மறைந்து விட்டார். அப்பாவை விட நான்கைந்து வயது இளையவர். அப்பாவின் கடைசிக் காலம் 86 வயது, அப்போது கூட சித்தி, சித்தப்பா இப்படி சீக்கிரமே போயிட்டாரேன்னு வருத்தமாகச் சொன்னாங்க!

சித்தப்பா தனது மறைவுக்கு ஆறு மாதம் முன் அவரது வீட்டு முற்றத்தில் என்னிடம் சொன்னது இவை. அவர் அப்பாவை பாப்பான்னு தான் கூப்பிடுவார்.

‘பாப்பா ஊரை விட்டு யாருக்கும் சொல்லாம வந்தப்ப எனக்கு பத்து வயசு. விவரம் தெரியலை. அவ்வளவு நிலம் தோப்பு பரிசல் எல்லாம் போய், கடைசியாக இருந்த அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை மட்டும் அவன் கையெழுத்து போடாம ஓடி வந்துருந்தான்னா, இன்று நம்மோட நிலமையே வேற மாதிரி இருந்துருக்கும். நாங்க நிறைய வளத்தோட பிறந்தோம், ஆனால் எங்க யாருக்கும் அநுபவிக்க கொடுத்து வைக்கலை.  கொஞ்சம் தெரிஞ்சுருந்தா கூட கையெழுத்து போடாதேன்னு சொல்லியிருப்பேன். அந்த ஒன்னரை ஏக்கர் போதும். நம்ம நிலமையே வேற மாதிரி இருந்திருக்கும். இப்படி கஷ்டப்பட வேணாம். எதுவுமே பேசாம கையெழுத்து போட்டு விட்டு யார்ட்டையும் சொல்லாமப்போயிட்டான்’ன்னார்.

சித்தப்பா சிறந்த டெக்னீசியன். ஃபோட்டோகிராஃபர், Fitter, electrician மற்றும் plumbing எல்லாம் சர்வசாதாரணமாக செய்வார். சித்திக்கு உதவ அவங்க ஆபீஸ் வேலையை வீட்டில் டைப் அடித்துக் கொடுத்து உதவுவார். தாத்தா இறந்தவுடன் பாட்டி, சித்தப்பா மற்றும் அத்தைகளை அப்பாதன்னோடு கூட்டி வைத்துக் கொண்டார்.

சித்தப்பாக்கு தன்னோட நிலபுலன்களை அநுபவிக்க முடியலைன்னு வருத்தம். நாங்கெல்லாம் ஊருக்கு குலதெய்வம் கோவிலுக்கும் மலையாள கருப்பண்ணசாமிக்கும் கும்பிடப் போகும் போது அந்த கடைசி ஒன்னரை ஏக்கர் விவசாய நிலத்தைக் காண்பிப்பார்.

அப்பா ஒன்னுமே அதைப் பற்றி பேசமாட்டார். அவருக்கு எவரையும் குறை சொல்வது பிடிக்காது. அந்த நிலத்தை தாண்டும் போது தலை குனிஞ்சுருவார். மலையாளக்கருப்பண்ண சாமியைப் பார்க்கும் போது தான் முகம் ஒளிரும்!

அத்தைகள் இவர்கள் இருவரையும் விட இளையவர்கள். முந்தா நாள் அத்தை பேசும் போது கூட தன்னோட கிராம வாழ்க்கையும், அந்த இளம் வயதில் அவங்க பட்ட கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தாங்க.

கடைசியாக இருந்தது தாத்தா வீடு மட்டுமே! வீட்டு பின்னாடி 10-15 தென்னை மரம் வரிசையாக. நாங்க பத்தாவது படிக்கும் போது அத்தை கேட்டாங்கன்னு தன் பேர்ல இருந்த அந்த வீட்டை அப்பா அத்தைக்கு எழுதிக் கொடுத்து விட்டார். அம்மா சித்தப்பாக்கெல்லாம் ரொம்ப வருத்தம். வெளிப்படையாகவே அப்பாவைச் சொன்னார்கள். 

நமக்கு இருக்கிற அந்த உரிமை அந்த வீட்டில் அவளுக்கும் உண்டுன்னு கூலாக சொல்லிட்டார்!

சித்தப்பா மற்றும அத்தைகளுக்கு எங்கப்பா அம்மா மீது அளவு கடந்த மரியாதை. அவங்க தான் தன்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்ததால்!  அப்பா எது சொன்னாலும் கடைசி வரை மீற மாட்டாங்க. பிடிக்கலைன்னா ‘என்ன பாப்பா இது’ன்னு ஒரு சிணுங்கல், மற்றபடி அம்மாவோட பேசி குறைபட்டுப்பதோடு சரி.

அத்தை அந்த வீட்டில் ஓரிரு வருடங்கள் இருந்தார். அவரது குடும்பச்சுமை, பசங்க படிக்கனும், அந்த வீட்டை விற்று விட்டார்!

முந்தா நாள் அத்தை பேசும் போது ரொம்ப பாசத்தோடப் பேசினாங்க! உங்கிட்ட சொல்லனும்டா! அந்த வீட்டை வித்து தப்பு பண்ணிட்டேனாடா, நாம வச்சுருந்திருக்கலாம்ன்னாங்க! மெயின்டைண் பண்ண முடியல, பணத்தேவை வச்சுக்க முடியலடான்னாங்க! அம்மனை நேரில் பார்க்கனும். நான் பிறந்த இடம்டான்னாங்க. 

வாசத்திண்ணையில நானும்(அத்தை) இன்னொரு அத்தையும் அம்மாவை (என் பாட்டி) கட்டிகிட்டு பயத்துல படுப்போம். உன்கிட்ட சொல்லனும் போல இருக்குடான்னாங்க! ஊர்ல கிராமத்துல சின்ன வயசுல எனக்கு நிறைய கஷ்டம்டா, உன் அப்பாவோட வந்த பிறகு தான் நல்ல வாழ்க்கை அமைஞ்சது. இந்த வாழ்க்கை கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னாங்க!

எந்த குறையுமில்லை அத்தை, நீங்க செய்தது எல்லாம் சரி தான். விடுங்க! இப்ப அங்க போய் யார் இருக்கப் போறோம். ஊர் இருக்கு கிராமம் இருக்கு நம்ம குலதெய்வம் இருக்கு. ஒருத்தர் ஒருத்தர் விட்டு விட்டு குலதெய்வத்தை போய்ப் பார்க்கிறோம், இப்ப தான் நாலு மாசம் முன்ன என் மனைவி போய் வந்தாள். இப்ப அம்மன் நமக்கு தானாகவே தரிசனம் கொடுக்குது. நிறைவாக இருப்போம்ன்னேன்!

சித்தப்பாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்தாலும், இப்போது அனைவரும் நிம்மதியாக வளமாக இருக்கும் தருணத்தில் வெறும் நினைவுகளோடு வாழ்வதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
ओलै उवाच । ¡Cualquier cosa que perdemos es irrelevante ahora! ¡El amor es suficiente!
ஜூன் 4 2023

No comments: