Wednesday, March 8, 2023

அசரீரி கேட்குது

என்ன தான் ஊர் உலகத்துல போய் எடுபுடி வேலை செய்தாலும் சொந்த வீட்டுல நாலு பாத்திரம் கூட விலக்கலைன்னா நாம்ப மனுசன்களே இல்லை.

10 தோசை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள ஒரு சின்க் லோடு பாத்திரம் நிக்குது.

உண்ட மீசைக்கு இழுக்காயிரக்கூடாதேன்னு காயப்போடாம அமைதியாக டிஷ் லோடு பண்ணி சின்க்கை க்ளீன் பண்ணிட்டேன்.

காலையில காபி போடற கை சின்க்கைப் பார்த்து முகம் சுளிக்காம இருக்கும்.

முதுகு வலிக்குது. இன்றைய தினம் கழிந்தது. விடியலை நோக்கி உறங்குவோம்.

அம்மாவின் குரல் கேட்குது: நாள் பூரா ஒருத்தி ஆபீஸ்லையும் உழைச்சுட்டு வீட்டுக்கு வந்தும் இவ்வளவு வேலை செய்யறா, உனக்கு 4 பாத்திரம் தேய்க்க இவ்வளவு நடிப்பாடான்னு.

சரி. நீ சொல்றது கேட்குது தாயீ!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La voz de mamá está oyendo!

No comments: