Wednesday, June 22, 2022

ஆச்சார்ய தேவோ பவ

विद्या ददाति विनयं विनयाद्याति पात्रताम् । पात्रत्वाद्धनमाप्नोति धनाद्धर्मं ततः सुखम् ॥
     - விதூஷ்

(பாத்ரத்வா தனமாப் ப்னோதின்னு வரனும்ன்னு நினைக்கிறேன்)

ஏழெட்டு வயசுல வெளியே, திறந்தவெளி சினிமாத்திரை கட்டற கம்பம் கீழ, மண்ணுல நண்பர்களோடு விளையாடிகிட்டருப்பேன்.

அதற்கெதுத்தாப்புல இருக்கிற கட்டிடத்தின் மாடியில் எங்க ஹைஸ்கூல் வாத்யார், (இவர் பிற்காலத்தில் எனக்கு பத்தாவதிற்கு கணக்கு வாத்யார் கூட), ஊர் பசங்க பொண்ணுங்களுக்கு சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லித் தருவார். மாசம் ஒரு ரூபாய் கட்டணம், நான் அது கூட கட்டியதில்லை.

மண்ணுல விளையாடிகிட்டிருக்கும் போது, மேலேர்ந்து அசரீரி மாதிரி குரல் கேட்கும், என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். கையில் நோட்புக் கிடையாது, பென்சில் கிடையாது, காலில் ஒட்டியிருக்குற மண்ணைத் தள்ளி விட்டுகிட்டு மாடிக்கு ஓடுவேன்.

சார், தானே ஒரு பேப்பர் பென்சில் கொடுத்து அவர் போர்ட்ல எழுதியிருக்கிறதைப் பார்த்து எழுதச் சொல்வார்.

முதல் கிளாஸ்லேயே ஆரம்பிச்சது:
த்வமேவ மாதாच पिता त्वमेव ।

அதுக்கடுத்து மேலேயுள்ள ஸ்லோகம். இப்படி ஒவ்வொன்னா சொல்லிக் கொடுத்து எழுதச் சொல்லிக் கொடுத்து சம்ஸ்க்ரத பாலபோதாவும் ஹிந்தி ப்ராத்மிக்கும் எழுத வைச்சார். 

அவர் கொடுத்த பென்சில் பேப்பர் கல்வி. படிக்காமலேயே இதுல இவ்வளவு வாங்கியிருக்க, இன்னும் முயற்சி செய்யலாமில்லேன்னார். பாலபோதாவில வாங்கின மார்க் 50க்கு 49, அந்த ஒரு மார்க் போற அளவுக்கு ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி மண்ணுல விளையாடிகிட்டே இருக்கேன்னார். அவர்ட்டேர்ந்து டபாய்ச்சுகிட்டு ஓடி அவர் கண்ணுல படாம வேற இடத்துல போய் விளையாடுவேன்.

பிற்காலத்தில் அஸ்ஸாம் போக வேண்டி வந்தப்ப, விட்ட ஹிந்தியைத் தொடர மறுபடியும் அவர்கிட்ட ஓடினேன். உனக்கு எவ்வளவு தடவை சொல்லிக் கூப்பிட்டிருக்கேன், ஒழுங்கா வந்து கத்துக்கோன்னு. அப்ப என்னை ஏமாத்தின, இப்ப நீ ஏமாந்து நிற்கிற பாருன்னார். அப்ப நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இந்நேரம் உருது கூட கத்துகிட்டு இருந்திருக்கலாம்ன்னார். அவ்வளவு உருதுக்கவிதைகள் புரிஞ்சுருக்கும்ன்னார்.

அவர் இன்றைய சென்னை சம்ஸ்கிரதக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளின் அண்ணன் ஆர் எஸ் சார். ஐஐடி சம்ஸ்கிரதப் பேராசியரின் பெரியப்பா!

அவர் இன்றுவரை எனது மானசீக குரு! 🙏.
ஆச்சார்ய தேவோ பவ! 🙏

குரவே நம:

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Saludo a tu profesor (आचार्य)!

No comments: