Wednesday, June 22, 2022

ஜனநாயகத்தின் கல்தூண்கள்

ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவியை வெறும் ஒரு பொம்மைப் பதவியாக சித்தரிக்கும் பலவித போஸ்ட்டுகளை இரண்டு நாட்களாகப் பார்க்கிறேன். அதே மாதிரி கவர்னர் பதவியையும் ஆட்டுக்கு தாடி மாதிரி சித்தரிப்பவர்களையும் பார்க்கிறேன்.

ஒரு வலுவான எதிர்கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாமல் போன எதிர்கட்சிகளின் பலஹீனத்தின் பிரதிபலிப்பே இத்தகைய விமர்சனங்கள். 

தோல்விகளை நேர்முறையில் ஏற்றுக்கொள்வதே ஒரு மக்கள் ஜனநாயக அரசு அமைப்பாக எந்த ஒரு நாடும் இருக்க உதவும். இல்லாவிட்டால் அது சர்வாதிகார மன்னராட்சியாகவோ ராணுவ ஆட்சியாக வர வழி வகுக்கும்.

மேலும் எங்க நாட்டு ஜனாதிபதி போஸ்ட்டு டம்மி போஸ்ட்டுன்னு எவனாவது போய் வெளிநாட்டு அரசுகளிடம் சொன்னால், முதலில் சொல்பவரின் அரசியல் அறிவு கேள்விக்குறியாவது மட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றியே மற்ற அரசுகள் கேவலமாக நினைக்கும்.

இவ்வாறு ஒரு டம்மி போஸ்டாகவா ஜனாதிபதி பதவி இருந்துள்ளது. இல்லவேயில்லை என்பது தான் நிதர்சனம். அவ்வாறு சொல்பவர்களின் அறியாமையை கடந்து போவதே நல்லது.

துணை ஜனாதிபதியாக இருந்த ஆர் வெங்கட்ராமன் ஜனாதிபதியான தொடக்க காலத்திலேயே ஒரு தொங்கு பாராளுமன்றத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது மட்டுமல்ல, 180-190 சீட்டுகள் மட்டுமே பெற்ற ராஜீவ் காந்தியை அரசமைக்க அழைக்க விரும்பினாலும் பெரும்பான்மையில்லாத அரசை ராஜீவ் காந்தி விரும்பாததால் (உண்மையான சிக்கல் வேறு) சந்திரசேகர், வி பி சிங், சரண்சிங் என பல நிலையற்ற அரசுகளை அமைப்பது மட்டுமல்ல அவை வீழும் போது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கா நாட்டிலுள்ள அனைத்து தலைவர்களும் நின்ற இடம் ராஷ்ட்டிரபதி பவன். ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் பாராளுமன்ற எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்து நாட்டையே ஆட்சி செய்யுமளவுக்கு தள்ளப்பட்ட நிலமை அப்ப. கட்சித் தாவல் சட்டமெல்லாம் நிறைவேற்ற வேண்டிய அவலநிலை ஜனநாயக அரசுக்கு ஏற்பட்ட காலம் அது.

அடுத்து ஜனாதிபதி அப்துல் கலாம் பதவி வகித்த நேரத்தில் அவருக்கும் சோனியா காந்தியை அமர்த்துவதா வேண்டாமா என்ற சிக்கல் எழுந்த போதெல்லாம் அன்றைய எதிர்கட்சியான பிஜேபியிலிருந்து அனைத்துக் கட்சியினரும் படையெடுத்த இடம் அதே ராஷ்ட்டிரபதி பவன்.

இது மாதிரி சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ஒவ்வொரு ஜனாதிபதியைப் பற்றிச் சொல்ல வரலாற்றுக் குறிப்புகள் அரசுகளிடமுள்ளது.

மேலும் அனைத்து மக்களும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது: அதிகாரத்தின் அதிகார அமைப்பின் checks and balances.

ஒரு ஜனநாயக குடியரசு அமைப்பின் முக்கியமான மூன்று பிரிவுகள்: அட்மினிஸ்ட்ரேஷன்(ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்), பாராளுமன்றம், நீதித்துறை. மற்றவை அனைத்தும் இந்த பிரிவுகளுக்கு கீழ் தான் வரும். இவ்வாறு இருந்தால் அது மக்கள் ஜனநாயக அரசாக இருக்க முடியும். குறிப்பாக ராணுவத்துறை ஜனாதிபதியின் நேரடி பார்வையில் வரும். ராணுவம் இந்த மூன்று பிரிவுகளில் நுழைந்தால் இனி நாம் மக்கள் ஜனநாயக அரசமைப்பை பற்றி பேச இயலாது. எளிய ஜனநாயக உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். அது ராணுவ ஆட்சியாக இருக்கும். ராணுவம் ஜனாதிபதி கீழ் வந்ததிற்கு நீங்க உண்மையிலேயே வாழ்த்த வேண்டியது constitutionஐ வடிவமைத்தவர்களை. 

ஒரு நாட்டின் அவ்வளவு பெரிய பவுர்ஃபுல் ராணுவமே ஒரு ஜனாதிபதியின் நேரடிப் பார்வையில் வருகிறது. அப்பேர்ப்பட்ட பதவியை டம்மி பதவியாக சித்தரிக்கிற மக்களின் அறிவை பொன் தட்டுகளில் தான் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றம் ஒரு ஸ்திரமற்ற நிலைக்கு வந்து நின்றால் ஒரு அரசு முடங்கிப் போவது மட்டுமல்ல, அந்த நாடே மற்ற நாடுகளின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் எல்லைப்பிரச்சனை, தீவிரவாதம் என பலவற்றை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் பொது மக்களின் அன்றாட வாழ்வு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். பசி பஞ்சம் தலைவிரித்து ஆடும்.

சிலர் மக்களவை இருக்கும் போது எதற்கு மாநிலங்களவைன்னு புத்திசாலித்தனமாகக் கேட்பாங்க. தேவையா? ஆம் தேவை. கண்டிப்பாகத் தேவை. ஏன்னு யோசிச்சுப் பாருங்க. ஒரு ஜனநாயக அமைப்பின் மூன்று அங்கங்களில் ஒன்று கூட பலமிழந்து போகாமல் இருப்பதற்காக. அவை ஜனநாயகத்தின் தூண்கள்.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இருந்த ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட தேவைப்படாமல் போனதென்பது என்ன/எதை பிரதிபலிக்கிறது என்றால் அது அந்த நாட்டின் ஸ்திரதன்மையை, வீக்னெஸ்ஸை அல்ல. பாராளுமன்றம் நீதிமன்றம் ராணுவமெல்லாம் தானாக இயங்கும் போது ஜனாதிபதி பதவி ஒரு அமைதியான பதவியாக இருப்பது நாட்டுக்கு நல்லது மக்களுக்கு நல்லது.

ஜனாதிபதி பிரதிபா பட்டீல் பதவிக்காலம் போல் இப்போதுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலம் முடிவது நாட்டின் ஸ்திரத்தன்மையைத் தான் காட்டுகிறது.

ஜனாதிபதிகள் ஆர் வெங்கட்ராமன், கே ஆர் நாராயணன் போன்றோர் மாதிரி ஜனாதிபதிகளின் காலம் இருக்கனும்ன்னு நினைச்சா, நீங்கள் பேசும் போது உங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் யோசித்துப் பேசுவது அறிவார்த்தமாகப் பேசுவது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது, உங்கள் நாட்டைப் பற்றி வெளிநாட்டவர்களிடம் உங்கள் அரசமைப்பை கேவலப்படுத்தாமல் இருக்கும் நிலையாக இருக்கும்.

அரசு, அரசமைப்பு, அதிகாரம் எல்லாம் என்னவென்று தெரியாமல் ஜனாதிபதி பதவியைப்பற்றி விமர்சனம் செய்வது நல்லதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மக்கள் ஜனநாயக அரசே சிறந்தது, அதில் எந்த தூணும் குறைந்ததல்ல என்று சொல்லிக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mantén tu democracia segura!

No comments: