Wednesday, June 22, 2022

இணையாத உலகமது நிலைக்காத கனவாய்

பாடாத குயிலும் கரையாத காகமும்
  நோகாத நடையும் கடவாமல் செல்வதேன்
தோன்றாத உருவமும் தொழுகாத மனதும்
  ஏற்காத வேட்கையும் இல்லாமல் வாழ்வதேன்!

எண்ணாத செயலும் எழுதாத கவிதையும்
  இறையாத கனவும் கலைந்திடும் நட்பாய்
காணாத அன்பும் கிடைக்காத கருணையும்
  உருகாத பனியாய் ஆடிடும் சிலையானதே!

வாடாத இலைகள் வாசமில்லா மலர்தனில்
  தேனில்லா பூவாய் வாசமாய் மணக்காமல்
பெய்யாத மழையால் நனையாத நிலமதில்
  காய்க்காத மரமாய் காட்டில் தனிமரமானதேன்!

இணையாத உலகமது நிலைக்காத கனவாய் இல்லாத ஒரு பொழுதில்

வாழ்வினிது!
ओलै सिरिय
¡Deseo de una vida feliz!

No comments: