Saturday, May 1, 2021

மனிதநேய மருத்துவ சர்வீஸ்

நியூயார்க் நகரத்துல போன வருடம் கோவிட்ல நிறைய பேர் பாதிக்கப்பட்ட போது, அம்மாநில அரசு, மேயர் மற்றும் மருத்துவமனைகள் பல, ஒரு கட்டத்துல ரொம்ப முடியாம போக, மருத்துவர்கள் நர்ஸ்களின் பற்றாக்குறையைப் போக்க, கோவிட் பாதிக்கப்படாத பிற மாநிலங்களில் உள்ள மருத்துவர்கள், பிஏ மற்றும் நர்ஸ்களுக்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து விமானங்களில் அழைத்துச் சென்றது.

விமான சர்வீஸ் தடை செய்யப்பட்ட காலத்தில் கூட இவர்களுக்கு தனி அநுமதி வழங்கப்பட்டது. விமான நிலையங்களில் சக பயணிகள் இவர்களை கை தட்டிப் பாராட்டுவார்கள். பணத்திற்காக சென்றார்களென்று யாரும் இழிவாகப் பேசவில்லை. இவர்களின் மனிதநேயத்திற்காகப் பாராட்டினர்.

சில மாநில அரசுகள் தங்கள் மருத்துவ குழுக்களில் விருப்பமுள்ளவர்களை ஓரிரு வாரங்களுங்கு ரொடேஷன் பேசிஸில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பியது. 

இது மனித நேயம். 

இது மாதிரி இன்று இந்திய மண்ணில் துவங்கனும். பாதிப்பு இல்லாத இடங்களிலுள்ள மருத்துவர்கள் நர்ஸ்கள் அவர்கள் விரும்பினால் சென்று உதவி வர அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு சலுகைகளோடு சென்று வர ஏற்பாடு செய்யனும்.

ஒவ்வொரு மாநில அரசுகளின் உதவிகள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றடையும் போது

மனித நேயம் தழைக்கும் போது
வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: