பாதைதனில் பயணிப்போர்
தொடர்பற்றுப் போனாலும்
பயணமது தொடருமன்றோ!
செல்வமதை செலவளிப்போர்
கோட்டைகள் தகர்ந்தாலும்
செலவது தொடருமன்றோ!
மனது அதைத் தொலைத்தாலும்
பாதையதை மறந்தாலும்
மரங்கொத்தி மனதன்றோ அது!
மதி குறைந்து போனாலும்
மதியாதோர் முன் வீழ்ந்தாலும்
சிந்தனை என்றும் குன்றுவதன்றோ!
மண்ணை விட்டுப் போனாலும்
மன்னவனேயானாலும்
மண்ணின் மணம் மாறோதன்றோ!
என்றும் ஓர் குடையின் நிழலில்!
No comments:
Post a Comment