Sunday, August 4, 2019

பொருத்தமில்லா ஒரு பொழுதில்

மனதில் இருப்பது இறுக்கம்
பகிரும் போது அது கிறங்கும்
உள்மனதில் பூட்டி வைப்பது சுரங்கம்
துளை போட்டு திறப்பது ஓர் அம்பு!

எதிர்பார்ப்போடு நின்றால் ஏமாற்றம்
முயன்று வென்றால் கொண்டாட்டம்
படித்து பெற்றால் பட்டம்
அறிவால் பெற்றால் அது கல்வி!

உழைப்பில் தோன்றுவது ஓர் சிலை
செதுக்கி செழுமையாக்கினால் சிற்பம்
அலங்கரித்து போற்றினால் கடவுள்
மனதில் உருவாக்கும் வரை அது கல்!

பொழுதொன்று மீட்டினாள் வீணை
நரம்புகளை பிடித்து இழுத்தாள் இசை
கைத்தவமாடினாள் ஒரு ராகம்
மனதில் பதிந்து எழும் அது ஓர் சுவை!


பொருத்தமில்லா ஒரு பொழுதில்!

No comments: