Wednesday, August 7, 2019

பட்சி தரும் ஒலி அலைகள்

மனிதன் நடக்கும் பாதையிலெல்லாம்
கூட வரும் பட்சிகளின் தொடர் ஒலிகள்
பறவை உனை வரவேற்பதில்லை
தம் உறவுக்கு ஒலிக்கும் உணர்வலைகள் அது!

பிறர் வீட்டுச் சுவற்றில் வரையும் சித்திரம்
பட்சிகளின் தொடர் ஒலியில் நனையும்
நம் வீட்டுச் சுவற்றின் கலையாத ஒட்டடைகள்
சிலந்தி வலையில் சிக்கும் பூச்சிகளாயின!

அவர்தம் பாதை பதிக்கும் சுவடுகள்
தொடரும் பறவை ஒலியின் பேதமின்றிருப்பின்
வழி சொல்லும் சாலை மரங்களின்
நிழல் தரும் சுகத்தில் பயணிக்கும்!

பட்சிகளின் கூட்டுத் தொடர் போல்
நம் சுவடு நமதாய் ஒலிக்கட்டும்!


பட்சி தரும் ஒலி அலைகள்!

No comments: