Saturday, July 6, 2019

சமூக நீதி

சமூக நீதி!
எது அது!
உழைப்பிற்கு கிடைக்குமா அது!
குடும்பத்தின் எச்சம் போக 
கிடைக்கும் அது!

கறுப்பினத்தில் மணந்த இளவரசுக்கு
கிடைக்குமா அந்த நீதி!
இல்லை! ஏன்?
வெள்ளைநிறப் பூனை ஒன்று
வெண்குட்டிகளுடன் உயரத்திலிருக்கு!

பரம்பரையாய் உழைத்து சேர்த்த சொத்து
அதில் பங்கு கேட்க நீ யார்?
உன் வீட்டை உன் சொத்தை 
உன் பிள்ளையைத் தவிர
வேற யாருக்குத் தருவாய் நீ?
எந்த நீதியைத் தேடி வருகிறாய்  நீ
அது சமூக நீதி என்றுரைத்து!

கயிறு கட்டி பறக்க விட்டாலும்
காற்றில்லாமல் பட்டம் ஏது!
இறக்கை முளைத்து பறந்தாலும்
இரை தேடா இறக்கை எதற்கு!

அந்நியரை விமர்சிக்கும் போது
உள்பூட்டு போடுவதில்லை!
ஆட்டி விட்ட தொட்டிலுக்கு
வெளிப்பூட்டு ஏன் அதற்கு?

ஆட்டுகிற தொட்டிலுக்கு
கயிறு பிடித்து ஆட்டு நீ!
பல்லக்கு தூக்குபவனை
படம் பிடித்து காட்டு நீ!
பார்ப்பனைத் திட்டி பரவசம் காணு
அதில் கிடைக்கும் நீதியை
சாமரம் போற்று நீ!

மன்னரை அண்டிப் பிழைக்காமல்
எவரும் வாழ்ந்ததில்லை!
மன்னன் சொல்லும் நீதியே

சமூக நீதி அது!