Thursday, July 25, 2019

வாழ்வின் பிரதிபலன்

உழைத்து வாழ்பவனுக்கு
      உதவி தேவையில்லை
உதவி தேவைப்படுபவன்
       உழைப்பதில்லை!

கல்வியை மதிப்பவனுக்கு
      கல்வியில் பேதமில்லை
கிடைத்த கல்வியில் கற்காதவன்
     எதையும் கற்பதிற்கில்லை!

தொழில் தெரிந்தவனுக்கு
      தொழிலில் பேதமில்லை
பேதமுற்றவனுக்கு
      தொழில் எதுவுமில்லை!

உழைக்கத் தெரிந்த தொழிலாளிக்கு
      உழைப்பே மூலதனம்!
பிறர் உழைப்பில் வாழ்பவனுக்கு
      உணர்வே இழப்பு!

குடும்பத்தை நேசிப்பவனுக்கு
      குடிசையும் கோவில்
குடிசையில் இருப்பவனுக்கும்
       குடும்பமே கோவில்!

பரம்பொருளை தேடுபவனக்கு
     அனைத்திலும் பரம்பொருள்
கிடைக்காத பொருளை தேடுபவனுக்கு
     கிடைப்பது எதுவும் பொருளல்ல!

போற்றிப்பாடுபவனுக்கு
     எதிலும் மகிழ்சசி!
எதையும் தூற்றுபவனுக்கு
     அனைத்திலும் இகழ்ச்சி!

பிறர் பொருளை பறித்து வாழ்பவனுக்கு
     பொருளும் தங்காது
தன் பொருளைக் கொடுத்து வாழ்பவனுக்கு
    தங்குவதெல்லாம் பொருளே!

அன்பிருக்கும் இடத்தில்
      குழந்தை இருக்கும்
அன்பில்லா அன்னையிடம்
      குழந்தையும் தங்காது!

நட்பிருக்கும் இடத்தில்
      பேதமில்லை!
பேதமுல்ல இடத்தில்

      நட்பில்லை!

No comments: