Thursday, August 15, 2013

வருங்கால ஓய்வு நிதி

வருங்கால ஓய்வு நிதி சேர்ப்பு பற்றி பல கட்டுரைகள் இணையத்திலிருக்கு. இன்னிக்கு பென்ஷன் fund பற்றிய நோட்டீஸ் ஒன்று வந்தது. retire ஆக இன்னும் பல வருடம் இருந்தாலும் என்னதானிருக்குன்னு ஓபன் பண்ணிப் பார்த்தேன். சிறுதுளின்னாலும் கொஞ்சம் சுவையோடு தானிருக்கு.

எங்க ஆபீஸ் ல பென்ஷன் fund க்கு ஆபீஸ் contribution உண்டு. 401K க்கு கிடையாது. நானே தான் போட்டு வருகிறேன். 15 வருடப் பழக்கம். சேருது.

இன்னிக்கு முக்கியமா கண்ணில உறுத்தியது அதை retire ஆகும் முன்னர் எவ்வாறு எடுக்கப் போறோம்ன்னு தெரிவிக்க வேண்டும்.

ஒன்று நாம் உயிருடன் இருக்கும் வரை நாமே முழுத்தொகை எடுக்கலாம். நாம் இறந்த பிறகு பென்ஷன் அல்லது பிற ஓய்வு நிதி distribution நின்று விடும்.

இரண்டாவது நாம் உயிருடன் இருக்கும் வரை  குறைவாகவும், நாம் போன பிறகு நமது nominee (பெரும்பாலும் spouse, spouse from older marriage , etc)  அவர்கள் இறக்கும் காலம் வரை அதே அமௌண்ட் பெறலாம்.

இரண்டாவது option போல இன்னும் சில options உண்டு. சோசியல் செக்யூரிட்டி benefits க்கும் இதே மாதிரி options உண்டு.

இங்கு தான் நாம் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

முதல் option ல் அதிக பணம் வர வாய்ப்பு உண்டு. ஏறக்குறைய நாம் கடைசியாக வாங்கின சம்பளம் அளவு இருக்கும். ஆனால் நாம் இறந்த பிறகு நின்று விடும்.

மனைவி நீண்ட ஆயுளுடன் இருப்பவரென்றால் முதல் option தேர்ந்தெடுப்பது சரியல்ல. ஆனால் நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு செலவிற்குத் தேவைப் படும் போது தேர்ந்தெடுப்பது தவறல்ல.

நம் வயது spouse வயதை விட அதிகமிருப்பதாலும், நாம் அவர்களை விட சீக்கிரம் retire ஆக வாய்ப்புள்ளதால் இரண்டாவது அல்லது மூன்றாவது option சரிவரலாம்.

நமது contribution மட்டுமே, retire ஆகி குறைந்தது 5 வருடத்திற்கு நம் சேமிப்பு பணத்திலிருந்து நாமே பெறுவதாக இருக்கும். அதற்கும் மேல் உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பென்ஷன் fund பிற பகுதியிலிருந்து பெற்றுத் தருமாறு இருக்கும்.

Retire ஆவதற்கு முன் உங்கள் குடும்பத்தினரின் உடல்நிலையைப் பொறுத்து முடிவிடுங்கள்.

இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்னு கேட்கறீங்களா. ஏதோ தோணிச்சுங்க.

No comments: