Saturday, February 19, 2022

சாந்தியுறுக நின் பாதம்

தூணாய் நின்றாய் துணையாய் வந்தாய்
  அன்பெனும் பாதையில் அரணாய் நின்றாய்

உன் முன் பாதம் ஓடிய திசையில்
 பின் தொடர்ந்து ஓடினோம்
நீ சொல்லாமல் செய்த செய்கையால்
  கை கட்டித் தொடர்ந்தோம்!

வாழ்க்கையெனும் நீரோட்டத்தில்
  உன் பாதை நின்று போனாலும்
பின் தொடர்ந்து ஓடும் நினைவுகள்
  என்றும் அன்பாய் தொடர்ந்திடும்!

சாந்தியுறுக நின் பாதம்! 🙏


சின்ன வயசுலேர்ந்தே நாயைக் கண்டா பயம். ஊர்ல தெருவுல ஏதாவது நாயைக் கண்டா ஊர்ப்பசங்க கல்லெடுத்து எறிவாங்க! 

பெங்களூரில் அம்மா எல்லா தெருநாய்களுக்கும் சாப்பாடு அல்லது பிஸ்கட் போட்டு பழக்கி அங்க தெருவோர நாய்கள் அம்மாவைப் பார்த்து குலைக்காது. மற்றவர்களைத் துரத்தி எடுக்கும்.

ஊரில் நண்பர்கள் நாய்களை வீட்டில் வளர்த்த போது கூட அதை அவர்கள் கட்டிப்போடும் வரை அல்லது அதை அவர்கள் வேறோரு இடத்தில் அடைக்கும் வரை  அவர்கள் வீட்டினுள் நுழைய மாட்டேன். அவ்வளவு பயம். ரோட்டுல நிப்பேன்.

கடந்த ஏழெட்டு வருடமாக அந்த பயம் போச்சு. அதற்குக் காரணம் நண்பனோட இந்த ஜெர்மன் ஷெப்பர்ட். என் குடும்பத்துல எல்லோர்க்கும் மிகப் பிடித்தமான நாய். தைரியமாக பக்கத்தில் போவோம். அதுவும் வரும்.

நான்கு வருடம் முன் நண்பன் வீட்டில் தங்கியிருந்த போது உறக்கத்தில் செம குறட்டை விட்டிருக்கேன் போலிருக்கு. இது தூங்க முடியாம தவிச்சிருக்குப் போல. பக்கத்தில் வந்து என் கன்னத்தில் மோதி வாயை முடுறா வெண்ணைன்னு இடிச்சுட்டுப் போனது இன்றும் நினைவில் ஆடுகிறது. இதனுடன் பழகியதில் நாய் பயம் போச்சு.

நேற்று கூட மாலை நேர வாக்கிங்கில் கூட பணி செய்த ஒருவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டை பக்கத்திலுள்ள ஷெல்டரிலிருந்து எடுத்து வந்து வளர்க்கிற நாயைக் கூட்டி வந்தார். அது யாரைப்பார்த்தாலும் குலைப்பதாலும் ஷெல்டரில் வளர்ந்ததால் வித்தியாசமாக இருக்கு என்பார். அது என்னை ஓரிரு தடவை பார்த்துள்ளதால் நேற்று கூட என்னைப் பார்த்துக் குலைக்காமல் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு அருகில் நின்றது.

அந்த அளவுக்கு நாய்கள் மீதான பயம் ஓரளவுக்குப் போனதிற்குக் காரணம் நண்பனின் நாய். இருப்பினும் இப்போதும் பிட்புல் கண்டால் பத்தடி தள்ளித் தான் நிற்பேன். அது வேற வகை!

இன்று நண்பனின் நாய் இங்கு தென்கிழக்குக்கோடி மாநிலத்தில் நீண்ட ஆயுளுக்குப் பிறகு தன் மூச்சை தன் வீட்டில் நிறுத்திக்கொண்டது. நண்பனின் அழுகை மனதை இறுக்கினாலும்

அது கொடுத்துச் சென்றுள்ள தைரியத்தை நினைத்துப்பார்க்கையில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Muchas gracias!
¡Descansa en paz!

No comments: