Tuesday, August 27, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

தமிழகத்தில் கல்லூரி படிப்புகள் முடித்துக் கொண்டு முதலில் வேலைத் தேடிக் கொண்டது அஸ்ஸாமில் அரசு நிதியில் நடத்தப் பட்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வாத்தி வேலை. மாதம் 2200 சம்பளம். வீட்டு வாடகை 500 போக மீதி என் கையில.

அங்கு எல்லா நண்பர்களும் உள்ளூர் அஸ்ஸாமியார்களே. ஒரே ஒரு தமிழ் நண்பன் 7 மாதம் கழித்து அறிமுகமானான். விலங்கியல் மருத்துவக் கல்லூரி (Veterinary) PG students மற்றும் professor களுக்கு நிறைய ப்ரோக்ராம் எழுதிக் கொடுப்பேன். இலவசமாகத் தான்.

அப்போது உதவி தேடி வந்த அஸ்ஸாமிய நண்பன் நாசர் அஹம்மது. மிகப் பெரிய பணக்காரன். Guwahati ஃபான்சி பஜார் ல் ஒரு மிகப் பெரிய கட்டிடத்தின் உரிமையாளன். நான் அவனுக்குப் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தாலும், நான் அவனிடம் கற்றவை மிக அதிகம்.

அதில் மிக முக்கியமானது கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி என. சில students, colleagues என்னிடம் கடன் வாங்கிப் போவார்கள். அடிக்கடி நடக்கும். நாசர் மிகவும் கடிந்து கொள்வான். அவர்களிடம் எடுத்துரைத்து வாங்கியும் கொடுப்பான். அவர்களுக்கு எப்பிடி கடன் அடைக்க வேண்டும் என்று சொல்லித் தருவான்.

எனக்கு சமைக்கத் தெரியாது. அவனுடைய மெஸ் இல் சாப்பிட ஏற்பாடு பண்ணிக் கொடுத்தான். கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிக் கொடுத்தான். 10 அல்லது 20 ரூபாய்க்குள் ஒரு முழு நாள் சாப்பாடு முடிந்திரும். புதிதாக ஒரு உடுப்பி ஹோட்டல் கட்டினார்கள். 32 ரூபாய் vegetarian தாளி (தட்டு). சில நாள் அங்கு போய் சாப்பிடுவேன். மிகவும் கடுமையாக விமர்சிப்பான். ஒரு வேளைக்கு 32, ஒரு மாசத்துக்கு 900 க்கும் மேல். மூணு வேளை உன்னால் சாப்பிட முடியாது. கூடாது. போய் பக்கத்திலுள்ள ராஜஸ்தானி மெஸ் ல 10 ரூபாய் கொடுத்து சாப்பிடு என்பான். பல தடவை அவன் வீட்டில் சாப்பிட்டு இருக்கேன்.

வாங்கிற சம்பளத்தை எப்பிடி செலவு செய்யணும் சேமிக்கணும் என்பதை என் வயதுடைய ஒரு பணக்காரன் அப்போது எனக்கு சொல்லிக் கொடுத்தான். எதனால் பணக்காரன் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பான். காரில் போகும் வசதி இருந்தும் தான் ஸ்கூட்டர்ல் போவதின் பயன் பற்றி சொல்வான்.

நான் எழுதிக் கொடுத்த ப்ரோக்ராம்  க்கு எனக்கு கூலி ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக் கொடுக்கணும்ன்னு. இரண்டு மாதம் கழித்து கடைசி ப்ரோக்ராம் முடிந்தவுடன் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொடுத்தான்.

நான் வேலையை விட்டு  விட்டு வரும் போது, என் மேற்படிப்பிற்கு உதவியதால் வேலை செய்த இடத்தில் அக்ரீமெண்ட் படி 25000 கட்டணும். என்னிடமிருந்தது 22000 மட்டுமே. நாசர் தான் 4000 கடன் கொடுத்ததும் இல்லாமல், என் வீட்டை காலி செய்ய உதவி ரயில் நிலையத்தில் ஏற்றியும் விட்டது.

ரயில் நிலையத்தில் அவன் எனக்கு சொல்லியது. அந்த 4000 எனக்குப் பெரிதல்ல. ஆனால் உனக்குப் பெரியது. இனி நாம்  சந்திப்பது அரிது என்று தெரியும். யு must return தட் money. நீ எங்கிருந்தாலும் அதைச் செய்யணும் என்றான். Installment ல் கொடுத்தாலும் பரவாயில்லை.

பணத்தால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்ற எண்ணம் என் மனதில் என்றும் வரக் கூடாது. நம் நட்பை கொச்சைப் படுத்தும் விதமாக  இந்த பணம் அமையக் கூடாது என்றான். நல்ல வேளை ! நீ ஊர் திரும்பும் போது  என்னிடம் கேட்டாய். முன்பே கேட்டிருந்தால் நமக்குள் இருந்த நட்பு பாதிக்கப் பட்டிருக்கலாம். பார்த்தாயா நீ கடன் கொடுத்தவர்கள் அதற்குப் பிறகு உன்னை சந்திப்பதை தவிர்ப்பதும் இல்லாமல் உன்னைப் பார்த்து கூனி குறுகிற மாதிரி ஆகி விட்டது. உங்கள் நட்பு என்ன ஆச்சு என்றான். ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

பெங்களூர் வந்தவுடன் அப்பாவிடம் புரட்டி அவனுக்கு அனுப்பி விட்டேன்.

20 வருடம் கழித்து போன வருடம் அவன் எங்கிருக்கிறான் என்று இணையத்தில் தேடி கண்டுபிடித்ததில் இப்போது வெளி நாட்டில் ஒரு பெரும் பதவியில் இருக்கிறான்.

போனில் அவன் சொல்லியது கேட்டு செம சிரிப்பு வந்தது. நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றான். நீ உட்கார்ந்திருந்த அதே சீட் அதே வேலையை நானும் கொஞ்ச காலம் செய்து கொண்டு இருந்தேன். கம்ப்யூட்டர் கற்கணும் ங்கிற ஒரு வெறி, உன்னைப் போல வெளியிலப் போய் நல்ல அனுபவம் பெறனும். We learned from each other mutually என்றான்.

Dave ராம்சே இதையேத் தான் சொல்கிறார். கடன் வாங்குவதால் இழப்பது அதிகம். கடனற்ற வாழ்வு வாழும் போது மட்டுமே நீ ஒரு பணக்காரனாக முடியும் என்கிறார். நட்பு, உறவுகளின் இழப்பை விடவா பணம் முக்கியம். இவர்களிடம் கடன் வாங்காதே. வாங்கினால் முதலில் இதை அடையுங்கள்.

அரசு அங்கீகரிக்கப்  பட்ட வங்கிகள் தனியார் வங்கிகளிடம் மட்டுமே வாங்குங்கள். கந்து வட்டி மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் கடன் வாங்கவே வாங்காதீர்கள். மீண்டு வர பல ஆண்டுகள் பிடிக்கலாம், போண்டியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் தொடர்கிறேன்.

No comments: