Thursday, January 27, 2022

நீண்டதொரு ஓட்டம் கவிதை சுரக்கையில்


தை பிறந்தால் வழி பிறக்கும்

 பால்ய நண்பனுக்கோ கவிதை சுரக்கும்

ஆறடி தூரத்தில் பந்து வீசியவனுக்கு

  நாலடியில் கவிதை நான்மணிக்கடிகையாய்!


அன்பில் சுரக்கும் அதன் வெளிப்பாடு

  தினமொரு ஆட்டமாய் வருகிறது

பால்ய தினத்தின் ஆக்கிரமம்

  இன்றும் பிரதிபலிக்கும் ஆத்மபந்தத்தோடு!


நீண்ட கைகளில் உயர்ந்து விழுந்த அந்த பந்துகள்

  சிதறி விழும் மூன்று சிறு தடிகளை நோக்கி

சிதறும் இன்றைய இச்சிறு கவிதை முனைப்புகள்

   ஒவ்வொரு நொடியிலும் உயிர் நாடியைத் தொடும்!


நீண்டதொரு ஓட்டம் கவிதையாய் தொடரும் பொழுதில்!


ओलै सिरिय ।

No comments: