Friday, September 17, 2021

விழித்திரு எழுந்திரு

survived renal failure, cardiac arrest and ravaged lungs. At one point, doctors gave him a 5% chance of surviving.

உள்ளூர் தினசரி செய்தி இது.

கோவிட் தாக்கப்பட்டு எட்டு மாதம் ஒவ்வொரு ஹாஸ்பிடலா மாறி மாறி இந்த மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து வந்துள்ளதாக தினசரியில் வந்துள்ள செய்தி!

இன்னொரு தகவல்:
பையனை காலேஜ் சேர்க்கப் போயிருந்த வாரம் அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர் சீக்கிரம் ரிடையர்மெண்ட் வாங்கிக்கிட்டுப் போயிட்டார். அவருக்கு 50 வயசு தான். ஊரில் இல்லாததால் நான் போகலை.

இன்னொரு சக அலுவலர், மூன்று வருடம் முன் ரிடையர்மண்ட் வாங்கிப் போனவர், இந்தப் பார்ட்டிக்கு வந்து எல்லோரிடமும் சகஜமாக சிரிச்சு பேசிட்டுப் போனவர் அடுத்த நாள் காலையில எழுந்திரிக்கவில்லை. 62 வயசு தான் அடுத்த நாள் ஆளில்லை.

என் கசின் சொல்வார்: ஏதாவது சரியில்லைன்னா உடனே டாக்டர்ட்ட போ; உடம்பைக் கிழிச்சு ஒட்டு போட்டு உன் கிட்ட திருப்பிக் கொடுத்துருவாங்க, எந்த கஷடம் வந்தாலும் கவலைப்படாதேம்பார்.

அத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !

பிகு: தினசரி செய்தியைப் படித்தன் விளைவில்

No comments: