Saturday, October 26, 2019

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நாளைய திருநாள் தீப ஒளித் திருநாள்
சுற்றத்தார் கூடிச் சிறப்பாக்கும் நாள்!
புத்தாடைப்புணிந்து புது மங்கலம் பிறக்க
பெண்டிர் சிறார் குதுகளிக்கும் நாள்!

பட்டாசு வெடித்து பகல் வெளுக்க வைக்கும் நேரம்
காசு கரியானாலும் சிறார் மனசு கரையாது
ஊதுபுகை அலை மோதினாலும்
காற்றுவெளியில் புகையிலையாகாது!

பண்டிகைகள் வந்தால் 
கடைகளில் கூட்டம் வழியிது
கூட்டமிருந்தால் நாடு வளமாகுது
உறவுகள் ஒன்று கூடுது
உள்ளங்கள் மகிழுது!

பண்டிகைகளை நேசிக்கும் நாட்கள்
நாட்டை வளமாக்கும் நாட்கள்
மாசுகுறைவாக வரும் வருங்கால பட்டாசுகள்
வானத்தை மாசற்றதாக்கும் நாட்கள்!

அதுவரை எது எதுவாயினும் 
உற்றார் உறவினர் கூடி
நாளைய நாளை பொன்னாளாக்குக!


இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தீபத்திருநாள் வாழ்த்துகள்...

ஓலை said...

நன்றிங்க