Monday, February 11, 2019

மலர் தூவி வாழ்த்திடவோர் மறுமணம்

இன்று ஓர் திருமணம்
ஊரறிய ஓர் அழகிய மறுமணம்
கொண்டாட வேண்டியதோர் தருணம்!

பெண்ணின் வாழ்க்கை
ஒரு மணத்தோடு ஒடியாமல்
பெற்றோர் மனம் குளிர தொடர்தல்
எல்லோர் வாழ்விற்குமோர் தோரணம்!
மறுமணமன்று! அது மறுமனம்!

கொஞ்சி விளையாடும் பிஞ்சுக்கோர்
வந்ததோர் உறவு தோளில் சுமக்க!
அது பஞ்சு மெத்தை போல் ஏறி ஓட
தஞ்சமடை மண்ணுக்கோர் உறுதி!

ஊரறிய ஒரு பிரபலம் காட்டிய வழி
மண்ணில் பிறரும் தேட வேண்டிய பாதை!
அடுப்படியோடு புகைந்து போகாமல்
மறுவாழ்வில் தொடரச் சொல்லும் சேதி!

மகிழ்வாய்த் திரண்டு வரும் புகைப்படங்கள்
ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன!
கோடி ஆனந்தம் கூடிடும் மனதின்
(மறு)மணத்திர்கோர் இலக்கணம்!

மலர் தூவி வாழ்த்திடவோர் மறுமணம்!

No comments: