Sunday, December 2, 2018

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

இது ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகை. அன்றைய தினம் போட்டிருக்கிற பூணலை மாற்றிக் கொண்டு அடுத்த நாள் காயத்ரி ஜபத்திலிருந்து தொடர்ந்து 80-90 நாட்கள் வேதம் கற்றுக் கொண்டு தினமும் வேத பாராயணம் பண்ணனும்ன்னு இந்த ஆவணி அவிட்டப் பண்டிகைக்கு அர்த்தம்.

இப்ப பூணல் போட்டிருக்கிறவர்களில் 90% பிராமின்ஸ் பூணலை மட்டும் மாத்திப்பாங்க. வேதபாராயணம் பண்ணமாட்டாங்க. அதனால வேதத்தில என்ன எழுதியிருக்குன்னு அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

வீட்டுக்கு வர்ற பெரியவர்கள் காலில் விழுந்து அபிவாதயே சொல்லச் சொல்லுவாங்க. அதில் சொல்லும் போது ஆபஸ்தம்ப சூத்ரஹ யஜுசாஹ அத்யாதி ன்னு தொடர்ந்து வரும். ஆனால் ஆபஸ்தம்ப சூத்ரத்துல என்ன எழுதியிருக்குன்னு தெரியாது!

வீட்டுல பெரியவங்க திட்டுவாங்க! பூணல் போட்டுகிட்டதற்காக அன்னிக்காவது ஒழுங்கா வேதம் கத்துக்க; இல்லாட்டி கஷ்டப்படுவ; பகவானே வந்து உனக்கு கத்துக் கொடுத்து காப்பாத்துவாங்கம்பாங்க! இப்ப வேதம் கத்துக்காதவங்களுக்கு மத்தவங்க வேதம் கத்துக் கொடுக்கிறாங்க!

முப்பது வருடத்திற்கு பிறகு இப்போது தான் திருப்பி பூணலை எடுத்து போட்டுகிட்டு வேதத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்க வரும் போது இணைய ஆசான்களில் ஒருவர் தைத்ரீய உபநிஷத் எடுத்து படின்னார். படிக்க ஆரம்பிச்சேன்.

வேதம் என்பது கல்வி, ஞானம், அறிவு. இந்த உபநிஷத்தில் கற்றுத் தரப்படுவது கணிதம், விஞ்ஞானம், வாழ்வின் ஆதாரத்திற்குத் தேவையான நீர் நிலம் காற்று நெருப்பை போற்றி வழிபட்டு காப்பது மட்டுமின்றி மாணாக்கர்களுக்கு வேண்டிய முக்கிய அறிவுரைகள் சொல்லப்படுகிறது.

வேதம் கல்வி ஞானம் அறிவு என்று சொல்லும் போது அன்றைய காலகட்டத்திலிருந்த வாழ்வியல் முறைகள், எதிர்ப்புகள், எதிரிகளை எதிர் கொள்ளுதல் என்பதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கலாம். எவற்றை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; எவற்றை நித்யகர்மங்களாகச் செய்ய வேண்டும், எத்தகைய வழிபாட்டு முறைகள் என்று கூட பல வேத குறிப்புகளில் உண்டு. சிலவற்றை புரட்டிப் பார்த்ததில் இருப்பதாகத் தெரிகிறது.

முழுவதும் படித்து அறிந்தவர்கள் குறைவு. இருக்கிற பிராமணர்களில் ஒரு சதவீத மக்களுக்கு கூடத்தெரியாது. ஏனென்றால் வேதம் படிப்பதில்லை. சமஸ்கிரதம் புரியாத காரணமும் கூட.

வேதத்தில் சிலவற்றை மட்டுமே நித்ய கர்மாக்களாகவும், சிலவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டியவை என மட்டுமே என்றிருக்கிறது! அன்றைய சூழ்நிலையில் இருந்தவற்றை எழுதி வைத்ததை வாசிக்க மட்டுமே வேண்டும்.

பொதுவாக வேதம் கற்றுக் கொள்ள விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நித்ய கர்மா சந்தியாவந்தனம் செய்த பிறகு வேத பாராயணம் ஆரம்பிக்கனும்பாங்க! பிராமணர்கள் செய்வதில்லை. ஆனால் இப்ப பிராமணர் அல்லாதவர்கள் தான் விடியற்காலை பல் விலக்குவதற்கு முன்னரே எழுத்தவுடன் இன்னிக்கு வேதத்தில் என்ன இருக்கு, 80-90 வருடம் முன் எந்த கோவில்ல யாரை எந்த பார்ப்பான் விடலை, எந்த பார்ப்பான் உள்ள விட்டான், என ஒரே பார்ப்பன புராணமவே இவர்கள் தினம் விடிகிறது.

பார்ப்பான் வேதம் படிக்கிறானோ இல்லையோ
இவர்கள் படிக்க வைத்து விடுவார்கள். அந்த காலத்து பிராமணன் தன்னோட எதிரிகளைத் தன்னோட வேத புத்தகங்களில் எழுதி வைத்து விட்டுப் போனார்கள். இந்த காலத்து பிராமணன் என்ன எழுதி வச்சுட்டுப் போகப் போறானோ! வருந்தக் கூடிய விஷயங்கள்.


Stop preaching hatred.

2 comments:

Unknown said...

True words.nice article. Padmanaban

ஓலை said...

நன்றி பத்மநாபன்