Tuesday, December 4, 2018

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை

இது இந்தியாவிற்கான பிரத்யேக ஒலிபெருக்கின்னு நினைச்சு கிட்டு இருந்த காலம் உண்டு. ஆனால் இது ஒரு யுனிவர்சல் சக்தி ஒலின்னு புரிய ஆரம்பிக்கிறது.

சின்ன வயசுல எப்போதும் மார்கழி மாதம் காலையில 4.30 மணிக்கு எழுப்பி அப்பா பஜனைக்கு கூட்டிட்டுப் போவார். எழுந்திரிக்கலைன்னா விட்டுபுட்டு போயிடுவார்ன்னு அரைகுறை தூக்கத்துல குளிக்காம வெறும் பல்லைத் தேய்ச்சுபுட்டு அவரோட ஓடிய காலம் உண்டு. வசித்த காலனியைச் சுற்றி பஜனை பாடி வரும் போது வரும் ஜால்ரா சவுண்டில் உள்ளூர் மக்கள் எழுந்து வந்து வாசலில் நமஸ்கரித்துப் போவதைப் பார்த்து மார்கழி குளிரோடு ரசித்த காலம் ஒன்று உண்டு.

சில வருடங்களுக்குப் பிறகு டீக்கடையிலும் கோவில்களிலும் விடியற்காலையில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் பரவ ஆரம்பித்தது. உள்ளூர் தர்காவிலிருந்து விடியற்காலையில் எல்லா நாட்களில் வரும் அல்லாகு (உ) அக்பர் ஒலி கோவில் மணி ஓசை கேட்க ஆரம்பித்தது. ஜோசப் கல்லூரியில் படிக்க வந்த போது தான் சர்ச்பெல் நாதமும் குறிப்பிட்ட நேரத்தில் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

ஆன்மீகத்துல ஈடுபாடு இருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு பொதுப்பிரச்சனையாக கருதியதில்லை. மணி ஓசை ஒலிகளின் நாதம் சிலிர்க்க வைத்தது. சத்தங்களிடையே எழுந்திரிப்பதும் தூங்குவதுமானது பெரிய பிரச்சனையாகத் தோன்றியதில்லை!

ஆன்மீகத்தை விட்டு விலக ஆரம்பித்த பிறகு இது ஒரு பொதுப்பிரச்சனையாகத் தோன்ற ஆரம்பித்தது. சிலசமயங்களில் சத்தத்தில் உறக்கம் வரவில்லை. இவர்கள் noise pollution உருவாக்குகிறார்கள்; சட்ட ஒழுங்க நடவடிக்கை எடுக்கனும் என்று தோன்றிய காலமும் உண்டு.

இப்போது மனது ஆன்மீகத்தை நாடும் போது கோவில் மணியும், சர்ச் பெல்லும், தர்கா துவாவும் பிரச்சனையாகத் தோன்றவில்லை. 

இத்தனை நாட்களாக இது இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக நிகழ்ச்சின்னு நினைச்சு கிட்டு இருந்தேன். இது ஒரு யுனிவர்சல் பிரச்சனைன்னு இன்னிக்கு புரிந்தது.

இன்று ஆபீஸ்லேர்ந்து வரும் போது எப்போதும் கேட்கிற NPRல ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் ஒலிபரப்புனாங்க. அதில் பாங்காக்கில் ஒரு பௌத்த மதகோவில் மணியோசை பிரச்சனை பற்றியது.

அந்த பௌத்தமதக் கோவிலில் காலை 3 1/2 மணிக்கு கோவில் மணி அடித்து மத்த புத்த பிக்சுக்களை பிரார்த்தனைக்கு அழைப்பார்களாம். இது Bangkokல் சாதாரண வழக்கமாம்.

இப்போது புதிதாக தாய்லாந்திலிருந்து குடியேறிய ஒரு தம்பதி அந்த பௌத்தவளாகத்திற்கு பக்கத்திலுள்ள ஒரு ப்ளாட்டில் வந்து சில நாட்களில் இந்த மணிச்சத்தம் அதிகமாக இருக்குன்னு கம்ப்ளைன்ட் பண்ண, உள்ளூர் நிர்வாகம் கோவிலுக்கு சத்தத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு. கோவிலும் சத்தத்தைக் குறைக்க, உள்ளூர் மக்கள் கடுப்பாகி கொதித்து எழுந்து விட்டனராம். சிலர் கோவிலுக்கு முன்பிருந்ததை விட ஒரு பெரிய மணி வாங்கிக் கொடுக்கப் போவதாக அறிவிக்க பிரச்சனை மேலும் பெரிசாயிடுச்சாம். உள்ளூர் மக்களோட பேட்டிகளையும் என்பிஆர்ல ஒலிபரப்பினாங்க.

பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த அந்த தாய்லாந்து மக்கள் எப்ப ப்ளாட்டை காலி பண்ணிட்டு எங்க போனாங்கன்னு தெரியலையாம்.

NPRன் ஒலிபரப்புகளை அவங்க எப்போதும் ஆர்க்கைவ் பண்ணி அவங்க வெப்சைட்ல வைப்பாங்க. இன்னொரு தடவை கேட்கனும்.


கோவில் மணி ஓசையின் நாதம் ஆன்மீகத்தின் ஈடுபாட்டிற்கும் வெறுப்பிற்குமான இடைவெளியை அளவுகோலில் measure செய்யக்கூடிய மாதிரி உலகளவில் பரந்து விரிந்திருக்குறது.

No comments: