Wednesday, September 4, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

நேற்றைய பதிவில் வீட்டுக் கடன் தவிர மற்றவற்றை முதலில் அடைக்க வேண்டும் என்றும், மறுபடியும் கடன் வாங்க வேண்டிய நிலைமை வராமல் இருக்க ஒரு தொகையை சேமித்து வைப்பதற்கான அவசியத்தைச் சொல்லியிருந்தேன்.

வீட்டுக் கடன் பற்றி விரிவாக எழுத நான் ஒரு financial adviser இல்லை. எனக்குத் தோன்றியவை மற்றும் Dave  ராம்சே குறிப்பிட்டுள்ள சில வற்றை மட்டுமே சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான வீட்டுக் கடன்கள் நீண்ட வருடங்கள் செல்லக் கூடியது. இதை அடைக்க முழு மூச்சில் இறங்கினால், வாழ்வின் பிற்காலங்களுக்குத் தேவையான சேமிப்புப் பாதையில் இறங்க முடியாமல் போய்விடும். வீட்டுக்கடன் அடைக்கும் அதே நேரத்தில் வருங்காலத்திற்கான சேமிப்பும் தேவை. சேமிப்பு பற்றி வரும் தொடர்களில் எழுதுகிறேன்.

இப்போது வீட்டுக் கடன் பற்றி.

முதலில் வீடு வாங்குவதற்கு முன் நம்மை அதற்குத் தயார் படுத்திக் கொள்வது நல்லது. இது கடன் சுமையில் துவண்டு போகாமல் இருக்க உதவும். தனது மாத பட்ஜெட்டில் 25-30 சதீவீதத்திற்கும் குறைவான தொகையை மட்டும் வீட்டுக் கடனாக மாதா மாதம் கட்டுவதற்கு எவ்வளவு நம்மால் முடியும் என்று முதலில் பார்க்க வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி லோன் வாங்கி வீடு வாங்குவது உசிதம்.

ஒவ்வொருவரது மனநிலை வேற மாதிரி. எவ்வளவு பெரிதானாலும் பார்க்காமல் கடன் வாங்குவது. முடியவில்லை என்றால் விற்றுவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணம் இருக்கும். இது ரியல் எஸ்டேட் வளர்ந்து வரும் நேரத்தில் சாத்திய மாகலாம் பெரும்பாலான நேரத்தில் விற்கும் போது நட்டத்தில் முடியும். அல்லது கடன் கொடுத்தவர்கள் நம்மை வெளியேற்றும் நிலைமை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு திட்டமிடுதல் நலம்.

எவ்வளவு நம்மால் மாதம் கட்ட முடியும். எவ்வளவு முன்பணம் போட முடியும். எவ்வளவு லோன் வாங்க வேண்டும் என்ற திட்ட மிடுதல் அவசியம். வசிப்பதற்காக வீடு வாங்கி கடன் வைத்திருப்பவர்களுக்கு உதவவே இப்பதிவு.

வீட்டுக்கடன் முழுதும் அடைக்காமல் வட்டியுடன் கட்டிக் கொண்டிருந்தால் tax பெனிபிட் கிடைக்கும் என்ற பரவலான எண்ணம் எல்லோரிடமும் உண்டு. என் வீட்டிலும் கூட. இது சரியா தவறா என்று இரு சின்ன கணக்கு போட்டு பார்க்கலாம்.

10% வட்டிக்கு ஒரு லட்சம் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம் எனில் ஒரு வருட வட்டி 10000 ரூபாய். நமது வருமானம் 30% tax வட்டத்தில் வருகிறது என்றால் நாம் அரசுக்கு கட்ட வேண்டிய வருமான வரியில் 3000 ரூபாய் மட்டுமே விலக்கு கிடைக்கும். மீதி 7000 வட்டியாகப் போகிறது. Tax பெனிபிட் க்காக கடனில் இருப்பதன்  அவசியம் என்ன என்கிறார் Dave.

இதைப் போல் Equity பற்றிய இன்னொரு எண்ணமும் மக்கள் மனதில் ஒரு பரவலான எண்ணம் உண்டும். வீடு மேல் இருக்கும் லோன் குறைய குறைய வீட்டின் மீதான நமது உரிமை (equity ) உயர்ந்து கொண்டே போகும். அதன் மீது லோன் வாங்கினால் குறைவான வட்டிக்கு கிடைக்கும், பிற பேங்க் லோன் விட குறைவான வட்டிக்கு கிடைக்கும் என்பது. கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் வீட்டின் மீதான உங்கள் உரிமை பறிபோகிறது என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கிறோம். Primary லோனும் ஹோம் equity லோனும் வேறு வேறு. ஒன்றைக் கட்ட மறந்தாலும் அல்லது முடியாமல் போனாலும் உங்களை foreclosure நிலைக்கு இட்டுச் செல்லும். வீட்டிற்கு இழப்பு ஏற்படும் நேரத்தில் இன்சூரன்ஸ் எந்த லோனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. ஹோம் equity லோன் மற்றும் வீடு மீதான செகண்டரி லோன் தொடர்ந்து கொண்டே வரும்.

லோனில் கார் வாங்க முற்படும் போது ஹோம் equity லோன் மற்றும் செகண்டரி லோன் இருப்பதால் ஒரு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு.

பெரும்பாலான மக்கள் செகண்டரி லோன் எடுத்து primary லோன்க்கு முன்பணமாக கட்டுவார்கள்.  வட்டியும் அதிகம், இரண்டில் ஒன்றுக்கு கட்ட முடியாமல் போனாலும் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம். செகண்டரி எடுக்காமல் நம்மைத் தயார் பண்ணிக் கொண்ட பிறகே வீடு வாங்குவது உசிதம்.

வீட்டுக்  கடன் கட்ட ஆரம்பிக்கும் ஆரம்ப காலத்தில் நாம் கட்டும் பணம் பெருவாரியாக வட்டியில் போய் சேரும். அசல் கொஞ்சம் தான். மாதந்தோறும் ஒரு சிறு தொகையை கூடுதலாக அசலுக்கு கட்டி வந்தால் அது பிற்காலத்தில் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தடுக்க உதவும்.

ஒரு லட்ச ரூபாயை 30  வருடத்திற்கு 5 பெர்சென்ட் வட்டியில் வாங்கியிருந்தால், மாதம் கட்ட வேண்டிய தொகையுடன் கூடுதலாக 250Rs ஆரம்ப காலத்திலிருந்து கட்டினால் அது கடன் முன் கூட்டியே அடைப்பதற்கு துணை போவதுடன் மட்டுமல்ல, 80-90 ஆயிரம் ஒட்டு மொத்தமாக கட்ட வேண்டிய வட்டிப் பணத்திலிருந்து குறைவாக இருக்கும். 5% பதிலாக 8% வட்டிக்கு முன்னரே calculate பண்ணி கட்டி வந்தால் 30 வருட லோன் 12-15 வருடத்திற்குள் கட்டி முடிக்கப் படும்.

மறுபடியும் சொல்கிறேன். நான் financial adviser இல்லை. கடனற்ற வாழ்வு வாழ உதவி மட்டுமே செய்கிறேன். Dave பல நுணுக்கங்களை அவரது புத்தகத்தில் சொல்கிறார். வாங்கிப் பயனுறுங்கள்.

இணையத்திலும் பல கட்டுரைகள், amortization calculators கிடைக்கும். உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

4 comments:

ராஜி said...

உங்களின் இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்வை இடவும்.
http://blogintamil.blogspot.in/2014/03/blog-post.html

ஓலை said...

Nanringa Raji

எவ்வளவு மோசமான மாதவிடாய் வழியாக இருந்தாலும் உடனே குணமாக வேண்டுமா?? இந்த 7 மூலிகைகள் இருந்ததாலே போதும்!!! said...

இந்த காலத்துக்கு ரொம்ப அவசியமான பதிவுங்க இது. ஏன்னா, கடன் வாங்கவே கூடாதுங்கற காலம் போய், இப்ப கடன் வாங்கித்தான் குடும்பத்தை ரன் பண்ணறவங்க நிறைய பேர்.


Thanks,
Mahibritto
mahibritto.blogspot.com

ஓலை said...

Nanringa Usha Nandini.