Thursday, November 22, 2018

Happy thanksgiving to everyone

Happy thanksgiving to everyone.
ஓலை


Dr அய்யநாதன்

இங்க நாளைக்கு Thanksgiving Day. என் வாழ்வில் நான் நன்றி சொல்ல வேண்டிய ஒருத்தன் அய்யநாதன். 

BSc படிக்கும் போது ஹாஸ்டல்ல பழகியிருந்தாலும் பேசியிருந்தாலும் நல்ல நண்பனா மாறியது நாங்க ஒன்னா pgdca ஈவனிங் காலேஜ் பண்ணியபோது.

Pgdca பண்ணியபோது வார்டன் ஃபாதர் சேவியர் அல்போன்ஸ்கிட்ட போய் ஹாஸ்டல்ல இடம் கொடுங்கன்னு நிறைய தடவை கேட்டுப்பார்த்தேன். முடியாதுன்னுட்டார். அவர் சொன்ன ஒரு மெயின் காரணம், நீங்க மாலை நேரம் காலேஜ் போவீங்க, உங்களுக்கு தனியா சாப்பாடு வைக்கனும், காலையில எல்லாம் இங்கயே சுத்துவீங்க, மத்த பசங்க இருக்க மாட்டாங்க, செக்யூரிட்டி issue; முடியாதுன்னு கறாரா சொல்லிட்டார்.

அப்பா ரிடையர் ஆயிட்டார். பணம் அதிகம் செலவு பண்ண வாய்ப்பில்லை. Pgdca முடிச்சுட்டா வேலை சுலபமாக கிடைக்கும்ன்னு எப்படியாவது பண்ணிட வேண்டும்ன்னு இருந்த நேரம்.

மேலச்சிந்தாமணியில காவிரிக்கரை ஓரம் ஒரு ரூம் 100 ரூபாய்க்கு கிடைச்சது. 8 x 10 ரூம்ல 5 பேர். படுக்க இடமில்லை. உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தெருக்கு எதிர்புறம் ஒரு முஸ்லீம் அம்மா நடத்திய லாட்ஜ்ல 125க்கு ரூம் பிடிச்சு வந்தேன். அவங்க கொடுக்குற இட்லி சாப்பிட்டு 4-5 மாசம் ஓட்டிட்டேன். இரண்டாவது செமஸ்டர் தொடக்கத்துல அந்த லாட்ஜ்ல ஒரு ப்ளஸ் டூ படிக்கிற பையன் மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டான். அவன் சாவறதைப் பார்த்த எனக்கு அங்க இருக்க முடியல. மத்த ரூம் ஆளுங்களும் காலி பண்ண, நானும் காலி பண்ணிட்டேன்.

எங்க போறதுன்னு முழிக்கிற போது, ஆபத்பாந்தவனாக அய்யநாதன் காப்பாத்தினான். அவன் ரூம்ல தில்லைநகர்ல அடைக்கலம் கொடுத்தான். அவன் ரூம்ல சாமான் போட்டுபுட்டு, ரூம் வாசல்ல மொட்ட மாடியில தினமும் படுப்போம்.

ரூம் பக்கத்துல ஹோட்டல்ல கீழ இருந்த 14ரூபாய் அளவு சாப்பாடை இரண்டு பேரும் சாப்பிட்டு காலேஜ் போயிட்டு வந்துகிட்டிருந்தோம்.

Cobol program புதுசா கத்து கொடுத்தாங்க காலேஜ்ல. அவன் தான் எல்லா புக்கும் காசு கொடுத்து வாங்குவான். அதுல தான் நானும் படிப்பேன். ஒன்னா கோபால் கத்துகிட்டோம்.

அவனுக்கு நான் கொடுத்த சிரமத்தை மீதி இருந்த 4-5 மாதமும் பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துகிட்டான். ரூமுக்கு வாடகை 275-290ல நான் ஒரு பைசா நான் அவனுக்கு கொடுத்ததில்லை. ரூம் ஓனர் கேட்டதிற்கு கூட அவனே பதில் சொல்லி நான் இருக்க ஏற்பாடும் பண்ணிட்டான். 

இரண்டாவது செமஸ்டர் முடிஞ்சு அவன் ரூமையும் காலி பண்ணிட்டுப் போயிட்டான். அதற்கப்புறமும் நான் 15-20 நாள் அங்க தங்கியிருந்தேன். அதற்கும் சேர்த்து பணம் கட்டிட்டுப் போயிருக்கான்.

நான் அந்த ரூம்ல விட்டுவிட்டுப் போன ஒரு புக் மூட்டையைக் கூட அவன் ரூம்மேட் நினைவு படுத்தியதால, எனக்கு அப்புறமா அஸ்ஸாமுக்கு லட்டர்போட்டு நினைவு படுத்தினான்.

அய்யநாதன் செய்த உதவியாலத் தான் pgdca முடிக்க முடிந்தது. July 6ந்தேதி pgdca completion certificate கல்லூரியில கொடுத்தாங்க. 7ந்தேதி நானும் அப்பா அம்மாவும் வீட்டைக்காலி பண்ணிட்டு அஸ்ஸாமுக்கு கொச்சின்-கௌஹாத்தி எக்ப்ரஸ்ல சேலத்துல ரயிலேறினோம்.

அங்க போன ஒரு மாசத்துக்குள்ள கம்ப்யூட்டர் டீச்சிங் உத்யோகம் ஒரு அரசு நிதியில நடக்குற இன்ஸ்டிட்யூட்ல கிடைச்சது. 200 பேருக்கும் மேலோருக்கு கம்ப்யூட்டர் ட்ரைனிங் கொடுத்தேன். தினமும் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பேன். ப்ரோகிராம் எழுதி கொடுத்து மதியம் இரண்டு மூனு மணி நேரம் கம்ப்யூட்டர்ல அவங்களுக்கு ட்ரைனிங்க் கொடுப்பேன். நிறைய veterinary college professors ஸ்டூடண்ட் ஆக வந்து கத்துகிட்டாங்க. அவங்களுக்கு இலவசமாக ப்ராஜக்ட் பண்ணி கொடுத்தேன். Statistical calculationsக்கு ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். இப்போதைய காலேஜ் டீன் என் முன்னாள் மாணவர். நல்ல நண்பர்.

இது எல்லாம் சாத்தியமானது அய்யநாதன் செய்த அந்த 4-5 மாத உதவி தான்.

இந்த தேங்க்ஸ்கிவிங் நாளில் உனக்கு நன்றி சொல்லிக்கிறேன்டா மாப்ளை!


நன்றி

No comments: