இடமறியா மணப்பெண்!
பொருந்தாத விடயத்தில் மாலை போட்டு 
விருப்பமில்லா மணப்பெண் ஆனேன்!
மண்ணில் வேரூன்றியவை 
விஷமாய்ப் போனதால்
வைக்கும் இடமெல்லாம் 
முள்செடி ஆனதடா !
முள்ளின் மீது நடக்கும் போது  
காலில் குத்தும் முட்கள் 
அகட்டி விடும் காலம் வரும் வரை 
விளையாத மண்ணில் விதைக்கும் 
பருத்தியானேன் !
முள் அகற்றத் தெரியாத 
சமூகத்தின் வேர்களைத் 
தவறித் தூக்கிப் பிடிக்கும்
கருவேல மரமானேன்!
பருத்தி முள்செடி கருவேலத்தை 
ஒன்றாய் நோக்கியதில் 
பஞ்சும் தெரியவில்லை 
எரிக்க விறகும் கிடைக்க வில்லை!  
 
1 comment:
இதுவும் கடந்து போகும்!
Post a Comment