Friday, March 2, 2018

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு

மனைவியின் மனதில் நிறைந்தவள்
மீளா தூக்கத்தில் மிதந்து விட்டாள்
மனைவியின் துக்கம் மாமியாரிடமும்
மாமியாரின் துக்கம் தனக்கு கொடுப்பினையில்லையென்று!

நண்பனின் துக்கம் மனதைத் தெளிக்கிறது
இளம் வயது மரணங்கள் மனதின் நெருடலில்
அவன் மனதிலோ எத்தனை பெண்கள்!

எல்லோர் மனதிலும் நிறைந்தவள்
விட்டுச் சென்ற கதாபாத்திரங்கள்
அசைபோடும் மனதில் ஓவியங்கள்!

எளிமையான பாத்திரங்களில் எளிமையாய் நின்றாள்
விட்டு சென்ற மனத்திவிலைகள்
எளிமையாய் கடக்க முடியாமல் நிற்கிறது!

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு!

மலர் வணக்கம்!