Saturday, November 4, 2017

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது

புறா தன் கூடு விட்டு பறந்து விட்டது.
கூட்டில் அடைகாத்தவை எதுவாயினும்
இஃது கூடு கண்ட தாயின் பிரயத்தனம்.

குஞ்சு கருப்பா வெளுப்பா அறியும் முன்
பறந்து விட்டாள் தாய்.
தாயில்லாக் கூட்டில் உயிரில்லை.

கூடு இன்னொரு தாய்க்கு ஏதுவானாலும்
மலர்ந்த குஞ்சுகளின் கூக்குரலின்றி பிஞ்சுகளின் தஞ்சமற்று விரிந்த பாய் அது.

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது!

No comments: