Thursday, September 12, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

பெரும்பாலான வயதானவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் பிள்ளைகளைச் சார்ந்தே retire ஆன பிறகு வாழ வேண்டிய நிலை இருக்கிறது. ஒன்று உடல் நலம் இடம் கொடுத்தாலும் தேவைக்கேற்ப வருமானம் retirement காலத்தில் இருப்பதில்லை. பிள்ளைகளை அண்டி கூட இருக்க விரும்பினாலும், வளர்ந்து வரும் நகரச் சூழ்நிலைகளில் இடம் போதுவதில்லை, மருத்துவச் செலவுகள் சமாளிக்கும் அளவுக்கு பிள்ளைகளுக்கும் வசதி இல்லாமல் போக வாய்ப்பு இருக்கு.

ஒரு நாகரீகமான கௌரவமான வாழ்வு வாழ்ந்த நமக்கு நமது ஓய்வு காலத்தில் ஒரு நல்ல வாழ்வு அமைத்துக் கொள்வது எப்பிடி? ஒவ்வொரு மனிதருக்கும் டிகினிட்டி இன் லைப் தேவை. கட்டிய மனைவி வேலை செய்யா விட்டாலும் அவர்களுக்கும் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு திடமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நமது 40 வயதிலிருந்தே சேமிக்கத் துவங்க வேண்டும்.

எமெர்ஜென்சி fund சேர்த்த பிறகு அடுத்து செய்ய வேண்டியது ஒரு retirement fund ல் சேமிக்கத் துவங்குவதே. மாத வருமானத்தில் குறைந்தது 15 சதவீதம் சேமிக்க வேண்டும்.

எவ்வளவு சேமித்தால் ஒரு திடமான வாழ்வு அமையும் என்று நம்மால் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி சேமிக்கத் துவங்கி அதற்குள் வாழ வழி வகுத்துக் கொள்ள இப்போதே முடியும்.

மாதம் 20000 ரூபாய் வருமானத்தில் நாம் இப்போது வாழ்கிறோம் என்றால், ஓய்வுக்குப் பிறகு இவ்வளவு வருமானம் ஓய்வு நிதியிலிருந்து வருமளவுக்கு சேமிக்க முடியுமா? அந்த கால கட்டத்தில் பணத்தின் மதிப்பு எப்பிடி இருக்கும்? 10000 மட்டுமே வந்தால் எப்பிடி வாழ்வது?

Retirement  வாழ்வு அனைவருக்கும் கடினமானதே. அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வதுடன், நம்மால் முடிந்த அளவு எதிர் கொள்வதே நம் நோக்கு. அதற்காக இப்போதே சேமிக்கத் துவங்குவோம்.

எவ்வளவு சேமிக்க வேண்டும்? - இப்போது குறைந்தது மாதம் 15%. நமது 52 வயதில், வீட்டுக் கடன், கார் கடன் எதுவுமில்லாமல் இருக்கும் போது, பிள்ளைகள் பெரியவர்களாகி கல்லூரிக்குப் போய் அவர்கள் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது , மாத சம்பளத்தில் பெரும் பகுதி retirement நோக்கி சேமித்தால், சொல்லுங்கள் நண்பர்களே நம்மால் எதிர்க்கொள்ள முடியுமா முடியாதா? தேவைப்பட்டால், உடல்நலம் நன்றாக இருக்கும் நிலையில் இன்னும் சில வருடங்கள் உழைத்தால் நம்மால் சேமிக்க முடியுமா முடியாதா?

மிக குறுகிய காலத்தில் கடன்களை அடைத்து விட்டால், பலகாலம் retirement மற்றும் பிள்ளைகளின் கல்விக்கு எளிதாகச் சேர்க்க முடியும். இதற்காகவே சொல்கிறேன். கடன் வாங்காதீர்கள். கடன்களை உடன் அடைத்து விடுங்கள். சேமியுங்கள்.

எவ்வளவு பணம் சேர்ந்திருந்தால் நிம்மதியாக இருக்க முடியும்? - இது ஒவ்வொரு மனிதருடைய மனநிலை சூழ்நிலை பொறுத்தது. நம்முடைய ஒட்டுமொத்த savings லிருந்து  கிடைக்கும் 10% வருமானத்தில் நம்மால் ஒரு வருட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்றால் நீங்கள் சேமித்து உள்ள பணம் மிக நன்று.

நாம் இன்னும் பத்து வருடத்தில் retire ஆகப் போகிறோம் என்றால், இணையத்தில் உள்ள ஒரு retirement calculator எடுத்து, ஒரு குறிப்பிட்ட இலக்கு அமௌன்ட் அடைய மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். இதன் படி சேமித்து வாருங்கள்.

இப்போது எதில் சேமிப்பது ? - சேமிக்கும் பணம் இழக்காமல் இருந்திட வேண்டும், inflation 4% + வட்டி/டிவிடெண்ட் வருமானம் குறைந்தது 8%-10%, ஆக மொத்தம் 12%-14% return வரக்க கூடிய இன்வெஸ்ட்மென்ட் கள் தேடி முதலீடு செய்ய வேண்டும்.

PF contribution 8-9% return தரக்கூடிய அளவு எந்த நாடும் இன்றைய பொருளாதார நிலையில் இல்லை. இது கிடைக்கும் போது நம்பகமான இடமானதால் எவ்வளவு அதிகமாகப் போட முடியுமோ அவ்வளவு போட வேண்டும்.

பென்ஷன் fund அல்லது 401கே இல் employer contribution 3-6% இருக்கும் போது, நமது பங்கான இந்த pre -டாக்ஸ் contribution தவறாமல் செய்ய வேண்டும்.

ஓய்விர்க்கான சேமிப்பு நிதிக்கு ஒதுக்க வேண்டிய 15% பணத்தில், இவை போக மீதியை ரோத் IRA அல்லது 401கே மற்றும் டாக்ஸ்-பெனிபிட் டுடன் இருக்கும் mutual fund இல் போடுவது சிறந்தது. Dave  போன்ற சில சிறந்த financial advisers மூலமாக செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஸ்டாக் அல்லது mutual fund இல் போடும் போது அதன் கூட இருக்கும் ரிஸ்க் க்கும் மிக அதிகம். நாட்டின் அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மற்றும் inflation கணக்கில் கொண்டு return வருகிற மாதிரி இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சில இன்சூரன்ஸ் policies tax பெனிபிட் டுடன் வரலாம். இதில் கூட செய்யலாம். ஆனால் இன்சூரன்ஸ் என்பது வேறு savings என்பது வேறு. இன்சூரன்ஸ் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

Mutual fund  என்று எடுத்துக் கொண்டால் சேமிக்கும் பணத்தில் ஒவ்வொன்றிலும் 20% கீழ்கண்டவாறு இன்வெஸ்ட் செய்தால், மாறிவரும் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு வளர்த்துக்  கொள்ள உதவும்.

1. Stable Fund (intermediate bond, முனிசிபல், கவுன்டி, ..)
2. Index Funds
3. லாங் டெர்ம் growth
4. லோ/Midcap growth / ஸ்டாக் funds
5. இன்டர்நேஷனல் fund

இதைத் தவிர நெடுங்காலமாக நல்ல பலனைத் தரும் நல்ல stocks வாங்குவதும் நல்லது.

ஸ்டாக் மார்க்கெட் மீது நம்பிக்கை அல்லது அதில் பழக்கம் இல்லாதவர்கள் எப்போதும் போல் பேங்க் அல்லது போஸ்ட் ஆபீஸ் டெபொசிட் போன்றவற்றில் சேமிக்கலாம். சிறந்த financial advisers பார்த்து செய்வது நல்லது. அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி ஏமாறவும் அல்லது அதிக கட்டணமும் செலுத்தி நஷ்ட மடையக் கூடாது. கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ண வேண்டும்.

முன்பெல்லாம் போஸ்ட் ஆபீஸ்ல் NSCஅல்லது இந்திர விஹாஸ் பத்திரத்தில் போட்டால் 5-6 வருடங்களில் இரட்டிப்பானது. இப்போது தெரியவில்லை. பிறரைக் கேட்டு செய்ய வேண்டும்.

தொடர்ந்து 15-20 ஆண்டுகள் ஓய்வு காலத்தை ஒட்டி சேமித்து வந்தால் ஒரு வலிவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். Retire ஆவதற்கு சில காலம் முன் அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை முன்னிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் தொடர்கிறேன்.

1 comment:

Unknown said...

பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.