Monday, May 21, 2012

கருப்பு பணம்

கருப்பு பணம்

கறுப்புப் பணம் என்று எல்லோரும் எதைச் சொல்றோம்னு அனைவருக்கும் தெரியும். 60 ஆண்டுகளாக வெளிய போன பணம் கணக்கிலடங்கா. இப்போ 140 பில்லியன் மட்டும் சொல்றாங்க.

வெளிநாட்டு வங்கிகள், அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு சுழற்சிக்கு உபயோகப் படுத்துது. அதையே உலக வங்கிகள் மூலம் பிற நாடுகளுக்கு கடனாகக் கொடுக்கலாம். அதன் பலனும் அவர்களுக்கே.

இடைப்பட்ட நாட்களில் அந்நிய வங்கியில் செலுத்திய பணத்திற்கு சரியான வாரிசு உரிமை கொடுக்காமல், கொடுக்க முடியாமல் போனால் அதன் பலனும், உரிமை முற்றிலும் வெளிநாடுகளுக்கே.

திருப்பிக் கொண்டு வர பாராளுமண்டபத்தில் எழுப்ப படும் கேள்விகள் எதுவும் திரும்பி வர ஏதுவாக இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கப் படுத்துவதற்க்கான செயல்களாகவே இருக்கு. எவனும் ஒரு பைசா கொண்டு வந்து மாட்டிக்க மாட்டான்.

சிறு திருத்தங்கள் செய்து சட்ட உதவியுடன் குறைந்த அளவாவது கொண்டு வர முடியும். 10 அல்லது 15 சதவீத வரி மூன்று ஆண்டுகளுக்குள் கட்ட அனுமதிக்கலாம். எந்த ஒரு பழி வாங்கலும் இருக்காது என்று சிறிது உத்திரவாதம் கொடுத்தால், இன்று உள்ள ஐரோப் அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மாட்டியுள்ளவர்கள் சிறிது அளவாவது கறுப்புப் பணம் இந்தியா திரும்ப கொண்டு வரவாய்ப்பு இருக்கு.

கொண்டு போனவன் வசதி உள்ளவன். திருப்பிக் கொண்டு வந்து சும்மா வைக்க மாட்டான். நல்ல முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கு.

கறுப்புப் பணம் கருப்பு நிறத்திலிருந்து வெள்ளையா மாறினா கொண்டு போனவனும் பயனடைவான். இந்திய மக்களும் பயனடையலாம்.

கருப்பு கலர் பணம் கொஞ்சம் வெளுக்கட்டும்.

டிஸ்கி:எங்கிட்ட இல்லைங்க.


.

No comments: