Wednesday, May 30, 2018

கழனிமேடு கட்டாஞ்சோறு

காலை நீட்டி அசை போடும் போது
கழனி கட்டுல வேலை இல்லைன்னா
சமையக்கட்டுல அடுப்பைத் துடை சுப்பிரமணி!

ஏறுகட்டி உழவு செய்ய
பொழுதில்லை உனக்கிப்ப
குண்டு சட்டி குதிரை ஓட்டி
என் மனசைக் கொல்லுர நீ!

பாத்தி கட்டி நீர்ப்பாய்ச்ச
பனங்காடு போகலை நீ
பரிசல் துறையில் பந்தல் கட்டி
பல்லிளிக்கும் பரமனா நீ!

வேட்டி சட்டை மடிச்சுக் கட்டி
வேர்க்க விறுக்க ஏறு பூட்டலை நீ
மல்லு வேட்டி கட்டி
மைனராக நிக்குற நீ!

மாந்தோப்பு கிளியெல்லாம் மையலிட்டு பறக்குதய்யா
பறிச்சு வைக்குற மாங்கனியை எட்டிப் பறிக்க
வணங்கலையே மனசுனக்கு!

கூடு கட்டி வாழுற குருவி
குனிஞ்சு நிமிந்து நிக்குதப்பா!
மாடி வீடு கட்டுற கனவு
மாராய்ப் போகுதய்யா!

பாட்டி சொல்லைத் தட்டுற நீ
பானை வயிறு நிறையனுமப்பா!
ஏறுநடை போடனுமய்யா
ஏப்பமாய் ஆகிவிடாதே!

கழனிமேடு கட்டாஞ்சோறு!

No comments: