Saturday, May 12, 2018

உனது அரவணைப்பே எனது வலிமை

அடி எடுத்து வைக்கும் பாதையில்
ஆடிக் காற்றில் அசையும்
தடைகற்களாய் நிற்கின்றன!

பாதை தடுமாறாமல் வழி காட்டி
செல்ல வைக்கின்ற மைல்கல் யாரோ!

நித்தம் ஒரு துன்பம் தொடர்ந்து
மலைபோல் நிற்கின்ற போது
மலையருவியாய் இறங்கி வந்து
பாரம் இறங்கச் செய்யும்
அந்த துணைக்கல் யாரோ!

உலகமே இடிந்து விழுகின்ற நிலைபோலிருந்தாலும்
சிரித்து தோள் கொடுத்து
சுமக்கின்ற அந்த தோள் யாரோ!

கூவாமல் குரல் கொடுக்காத மனிதர்கள்
மண்ணில் விடைபெற்று செல்லும்
வலி உணரவைக்கும்
அந்த வலிமை யாரோ!

எந்த ஒரு இடரிலும் அருகிலேயே
தடம் காட்டி நின்று எளிதாய்
சுமை இறக்கும் அந்த சுமைதாங்கி யாரோ!

எங்கோ அழைத்துச் செல்கிறாய்
உன் அழைப்பிலோ ஏற்ற இறங்கங்களை உணர்ததுகிறாய்!
மானுடம் நீண்டு வாழ அழைக்கிறாய்
உனை அறிந்தும் அறியாமலும் தொடர்கிறேன்!

உனது அரவணைப்பே எனது வலிமை!

No comments: