Saturday, May 12, 2018

செத்தமையா நிக்காதடே வாங்கடே

மேட்டூர் சந்தையில மேகம் கறுக்கையில
ஊரு சனம் கூவுதடி கோடை குளிருதடி!

கொட்டுதடி கொட்டுது மழை செமத்தையா கொட்டுதடி
அடிநாக்கு வழுக்குதடி செத்தமையா நிக்குதடி!

காவிரியில தண்ணி கரை புரண்டோடுமென
மேச்சேரி ரோட்டுல ஊறு தண்ணி ஒதுங்குதடி!

காட்டு மேட்டுல வளர்ந்தோமடி
மழைத்தண்ணியில குதிச்சோமடி
எங்க மேட்டூர் கோடை மழையில
நனையாத மாடு  இல்லடி நாங்க!

அடேய் சளிபுடிக்குமென சொன்னாரு கவுண்டரு
கேட்குற ஆளுக நாங்கயில்லை மன்னாரு
ஊரு சனம் ஏங்கி நிக்குற மழையில
டயரு சறுக்காத சிறுசில்ல கோனாரு நாங்க!

வாங்கடே தண்ணியடிப்போம்
அண்ணாந்து வாயத்திறந்து
கொட்டுற மழையை அள்ளிப் பிடிப்போம்!

செத்தமையா நிக்காதடே வாங்கடே!

No comments: